Monday 13 October 2014

தமிழைப் படிக்காத தமிழர்களால் அதன் பெருமையை எவ்வாறு உணர முடியும்?

ஒரு பூவை எடுத்துக் கொண்டால் கூட உருவத்தையும் அதன் பருவத்தையும் காட்ட பலமொழிகளுக்குச் சொற்பஞ்சம்; தமிழில் அவ்வாறு இல்லை

1. அரும்பு - அரும்பும் நிலை
2. மொட்டு - மொட்டு விடும் நிலை
3. முகை - முகிழ்க்கும் நிலை
4. மலர் - பூ நிலை
5. அலர் - மலர்ந்த நிலை
6. வீ - வாடும் நிலை
7. செம்மல் - இறுதி நிலை

பூவிற்குத்தான் இப்படி பருவப் பெயர்கள் என்றால் இலைகளுக்கும் பல பருவங்களுக்கேற்பத் தமிழ்லி சொற்கள் வருகின்றன

1. கொழுந்து - குழந்தைப் பருவம்
2. தளிர் - இளமைப்பருவம்
3. இலை - காதற்பருவம்
4. பழுப்பு - முதுமைப்பருவம்
5. சருகு - இறுதிப்பருவம்

இந்த இலை என்ற சொல்கூட ஆல், அரசு, அத்தி, பலா, மா, வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதுவெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அறிவியலுக்கும் உகந்த மொழி. தமிழின் வரலாற்றிலேயே அறிவியல் இருந்திருக்கிறது.

தேனைத் தொட்டு நாக்கில் தடவிப்பார்த்தால் அடன் சுவை புரியும். தேன் கூட்டில் இருக்கும் போது அதன் சுவையை எப்படி சுவைக்க முடியும்? தமிழைப் படிக்காத தமிழர்களால் அதன் பெருமையை எவ்வாறு உணர முடியும்? சிலர் தமிழில் உள்ள சொற்கள் புரியவில்லை என்கிறார்கள். புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒருமொழி புரியவில்லை என்றால் அந்த மொழியைச் சரியாகக் கற்கவில்லை என்றுதான் பொருள்படும். தமிழைப் படித்துக் கொண்டே போனால் அதன் கதவுகள் திறந்து கொண்டே போகும்.


அகத்தியரும் காக்கா கதையும்

அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் காகம் கவிழ்த்து விட்டது. அந்த நீரே பெருக்கெடுத்துக் காவிரியாக ஓடியது என்று புராணம் கூறுகிறது. ஆரிய மாயையில் அகப்பட்ட தமிழ்ப்புலவர்களும் அப்புராணக் கதைகளைத் தமிழ்ப் பாக்களில் சாய்த்து விட்ட அவலத்தைக் பல பாடல்களில் காணலாம்.

நிகழ்ந்த உண்மை நிகழ்வுகள் பின்வருமாறு:
சிவபெருமான் உமையம்மை திருமணத்தின் பொழுது உலகமே இமயமலையில் குழுமியது. எனவே வடக்கே இமயமலை தாழ்ந்தது. சிவபெருமானின் ஆணையை ஏற்ற அகத்தியர் தெற்கே, பொதிய மலையை ஏறி மிதித்து நின்றார். எனவே, தெற்கு தாழ்ந்ததால் வடக்கு தாழ்ந்த நிலை மாறி சமமானது. இவ்வாறு, அகத்தியர் பொதிய மலையின் செருக்கை அடக்கினார் என்கின்றன வடமொழிப் புராணங்கள்.

வடக்கே இருந்து தெற்கு நோக்கி ஆரியர்கள் பரவினர். இடையில் குறுக்கிட்ட பொதியமலை ஆரியரின் பரவலுக்குத் தடையாக இருந்து வந்தது. பொதியமலை ஏறிக் கடப்பதற்கு அரிது என்ற எண்ணம் நிலவியது. முதன் முதலில் முழு முயற்சியுடன் ஏறி பொதியமலையைக் கடந்து இப்பால் உள்ள தமிழகத்தில் அகத்தியர் நுழைந்தார். கடப்பதற்கு அரிய பொதியமலையை அகத்தியர் கடந்ததையே, அகத்தியர் பொதியமலையின் செருக்கை அடக்கினார் என்று ஆரியர் மார் தட்டிக் கொள்கின்றனர்.

ஆணவம், கர்வம், முதலான உணர்வுகள் ஆதிக்க குணம் மிக்கவர்களுக்கு உரியன. மலை எப்படிச் செருக்கு கொள்ளும்?. ஆதிக்க குணம் மிக்க ஆரியர் பொதிய மலையின் கம்பீரத்தைச் ‘செருக்கு’ என நிலை நாட்டினர்.

பொதிய மலையைக் கடந்து தமிழகத்திற்குள் ஆரியர் நுழைந்தனர். தமிழகத்தில் இயற்கை, வளமை இருந்தது; தமிழ் மொழிச் செழுமை இருந்தது. தமிழுக்கு என்று முறையான எழுத்து வடிவங்கள், எழுத்து வரையறைகள் இருந்தன. தமிழுக்கு என்று பண்பட்ட நாகரிகம் இருந்தது. இவை அனைத்தையும் அகத்தியர் உள்ளிட்ட ஆரியர் கண்டனர்.

பழந்தமிழின் எழுத்து வடிவங்களையும் வரையறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆரியர் ‘சமற்கிருதம்’ என்னும் மொழியைத் தமக்கென வடிவமைத்துக் கொண்டனர்.
தமக்கென நிலையான வரிவடிவம், வரையறை முதலானவை இன்றி ஆரியர் நிலை தாழ்ந்திருந்தது. இந்த இழிநிலை அகத்தியரால் ஆரியருக்கு நீங்கியது.


தமிழக மன்னர்கள் ஆதரவும் ஆரியருக்கு முழுமையாகக் கிடைத்தது. மக்களுக்குள் இருந்த, வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் குணமும், அவரது ஒற்றுமைக் குறைவும் ஆரியருக்கு பக்கபலமாயின.

தீயை வளர்த்து அதனை வலம் வந்து மந்திரம் முணுமுணுக்கும் புதியதொரு வழிபாட்டு முறையை அரசியல் செல்வாக்குடன் மக்களிடையே பரப்பினர். இவ்வாறு தெய்வத்தை வணங்குவதற்கு உரியமொழியாகச் சமற்கிருதத்தை உயர்த்திக் கொண்டனர். காலப்போக்கில் சமற்கிருதத்தை ‘தேவபாஷை’ என நிலைநாட்டிக் கொண்டனர்.

நிலையாக நிற்கும் மலை, கடல், ஆறு, இயற்கை, இலக்கியங்கள் அனைத்திலும் சமற்கிருதப் பெயரையும், கருத்துக்களையும் பதிய வைத்தனர். தம் மொழி உருவாக அடிப்படைக் காரணியாக இருந்த தமிழை ‘நீச பாஷை’ என்றும் ‘பைசாச மொழி’ என எள்ளி நகையாடினர்.

வடவரிடம் இருந்து தமிழில் தப்பித்தவை எ, ஒ, ழ, ற, ன என்னும் 5 எழுத்துக்கள் மட்டுமே.
உண்மை இவ்வாறு இருக்க,
“ஐந்து எழுத்தால் ஒருபாடையும் ஆம்என்று
அறையவும் நாணுவர் அறிவுடை யோரே “
என கேலி பேசவும் (சுவாமிநாத தேசிகர்-இலக்கணக்கொத்து) செய்தனர்.

(நன்றி: வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – முனைவர் பாக்யமேரி)

தமிழ் தாழ்ந்தது – நக்கீரர் கோபம்

ஒருமுறை நக்கீரர் மதுரையில் பட்டி மண்டபத்தில் புலவர்களுடன் வீற்றிருந்த போது அந்த அவையில் குயக்கொண்டான் என்பான் ஒருவன் இருந்தான். அவன் எழுந்து ‘வடமொழியே உயர்ந்தது என்றும் தமிழ் தாழ்ந்தது என்றும் கூறினான். உடனே கோபம் வந்து விட்டது நக்கீரருக்கு. தமிழ் மொழியைத் தம் உயிரினும் மேலாகக் கருதியவர் அவர். தமிழின் தெய்வத்தன்மையும் அதன் பெருமைகளையும் அவரைப்போல அறிந்தவர் யார்?. சினம் தாளாமல்,
“முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி – அரணிய
ஆநந்த வேட்கையான் வேட்கோ குயக்கொண்டான்
ஆநந்தம் சேர்க சிவா ”
என்று பாடினார். உடனே அந்தக் குயக்கொண்டான் வீழ்ந்து இறந்து போனான். அவையே அதிர்ந்து போயிற்று.
அவை நிதானம் அடைவதற்குச் சற்று நேரம் ஆயிற்று. பின்னர் அவையில் உள்ள ஆன்றோர்கள் நக்கீரரைச் சமாதானப்படுத்தினார்கள். “அவன் தமிழை அறிந்தது அவ்வளவுதான். ஏதோ அவனது அறிவின்மையால் உளறிவிட்டான். அதற்காக அவன் இறக்கும்படி பாடியது எங்கள் மனத்தை எல்லாம் பிசைகிறது. எனவே இறக்கும்படி பாடிய நீங்களே அவனை எழுப்பும்படி பாடியருள வேண்டும்.” என்று வேண்டினார்கள்.
அமைதியடைந்த நக்கீரர் உடனே
“ ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தால் காலக்கோள் பட்டானை – சீரிய
அந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையினால்
செந்தமிழே தீர்க சிவா “
என்று பாடினார். தூங்கியவன் விழித்தெழுந்ததுபோல அவன் எழுந்து கொண்டான்.
எனவே நக்கீரர் ஒருவனைச் சாவவும் வாழவும் வைக்க வல்ல மந்திரத்தமிழில் ஆற்றல் பெற்றவர் என்பது தெரிகிறது.
(நன்றி : திருமுருகாற்றுப்படை – சகுந்தலை நிலையம் வெளியீடு)

தமிழா… பள்ளி எழுந்தருள்வாய்

இருக்கு என்பது தூய தமிழ்ச் சொல். அதற்கு மந்திரம் என்று பொருள். வடமொழியாளர்கள் குறிப்பிடுவதைப் போல ‘வடவேதமான ரிக் வேதத்தை’ குறிப்பிடுவது அல்ல. நமது இலக்கியங்களில் குறிப்பிடும் வேதம், நான்மறை என்பவை எல்லாம் தமிழ் வேதங்களையே குறிப்பிட்டன. வடவேதங்களைச் சொல்லவில்லை.

தமிழ் வேதங்கள் (தமிழ் நான்மறை) நான்கு. அவை முறையே அறம், பொருள், இன்பம் வீடு என்பன. ஆரிய வேதம் மொத்தம் மூன்று என்று வடமொழி நிகண்டு கூறுகிறது. ‘வேதம் த்ரையே’ என்பது அதன் வசனம். மூன்றாயிருந்த வேதத்தை தமிழ் வேதம் நான்கு என்பதற்கு இணையாக அதர்வணம் என்ற ஒன்றைச் சேர்த்து நான்காக்கினார் வேதவியாசர்.
இருக்கு ரிக் ஆனதற்கு ஓர் எடுத்துக்காட்டு:
மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்) பாடல் வரிகள் 25 - 32
“இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே”
இதில் வரும் இருக்கொடு என்ற வார்த்தைக்கு வடமொழியாளர்கள் மாணிக்கவாசகர் ரிக் வேதத்தை குறிப்பிட்டார் என்று பொய்யுரை புனைகிறார்கள். ஏன் மாணிக்கவாசகர் யஜுர், சாம அதர்வணத்தை சொல்லவில்லை? பாவம் வடமொழியாளர்கள் அதற்கேற்றார்போல் ஏதாவது தமிழ் வார்த்தை தென்படுகிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்? இதில் வடமொழியாளர்களைச் சொல்லிக் குற்றமில்லை! தமிழன், தம் பாட்டன் பூட்டன் சொத்துக்களை அறியாத வரை, மதிக்காத வரை இது தொடரத்தான் செய்யும்.

மேற்கண்ட பாடலின் திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்) வரிகளின் உண்மைப்பொருள் பின்வருமாறு.
(விடியற்காலையில் இறைவனை வழிபடும்போது)
இனிய ஓசையிசைக்கும் வீணையை உடையவர் ஒரு பக்கம்
யாழ் வாசிப்போர் பிறிதொரு பக்கம்
மந்திரங்களோடு துதிப்பாடல்களையும் ஓதுவோர்கள் ஒரு பக்கம்
நெருக்கிக் கட்டப்பட்ட மலர் மாலை ஏந்திய கையினர் ஒரு பக்கம்
தொழுபவர், அழுபவர், வாடி அசைபவர் ஒருபக்கம்
தலையிற் கைகுவித்தவர் ஒரு பக்கம்
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே
(தகுதியற்ற) அடியேனையும் ஆட்கொண்டு இனிய பேரருள் செய்யும் எமது தலைவனே, திருப்படுக்கை விட்டு எழுந்தருள்க.

மனிதர்களை ஏமாற்றுவார்கள். கேள்விப்பட்டுள்ளோம். கடவுளையாவது விட்டு வைக்கக் கூடாதா?
எத்தனை நாள்தான் துயில்வாய் ? தமிழா பள்ளி எழுந்தருள்வாய் !

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.



ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வேதம் உண்டு. கிறித்தவர்களுடைய வேதம் ‘பைபிள்’, இசுலாமியர்களுக்கு ‘குரான்’. பௌத்தர்களுக்கு ‘பிடகம்’.

நமக்கு மட்டும் வேதம் வடமொழியில் இருப்பதாக நாம் ஏன் நினைக்கிறோம்? இதைவிட வேடிக்கை ஒன்று உண்டா?. இந்த வேடிக்கையே வாடிக்கையானது தான் வேதனை. காரணம், நாம் எதையும் ஆராய்ந்து பார்க்காமலே சோம்பேறித் தனமாக ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டோம்.


நாம் எதையும் காரண காரியத்தோடு ஆராய வேண்டும். தாயுமானவர் உயிர்களை ‘ஆராயும் அறிவு நீ’ என்று பாடினார்.

அப்படியானால் எது தமிழர்க்கு வேதம் என்பதை ஆராயாமலே எவரோ சொல்லும் ஏதோ ஒரு வேதத்தை வேற்று மொழியில் இருப்பதை – எப்படி நம்முடைய வேதம் என்று ஏற்றுக் கொள்வது? எனவே எது வேதம் என்பதை ஆராய வேண்டும்.

வேதம் என்பது இரண்டு விதமாக சொல்லப்படுகிறது.
1) இறைவனால் பாடப்பட்டது.
2) சுயம்பு – தானாகத் தோன்றியது.

வடமொழி வேதத்தை காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கவில்லை. ஆராய்ச்சி என்றால் காய்தல் உவத்தல் என்பது இருக்கக் கூடாது; உண்மைதான் அதில் முக்கியம். அந்தப் பார்வையால் ஆராய்கிறோம். வடமொழி வேதத்தை – அதாவது நம்மில் பலர் நமது வேதம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, அதை வடமொழி வித்தகர்களே தானாகத் தோன்றியது என்கிறார்கள். வைதிகர்கள் அவ்வேதத்தை அப்படித்தான் கொண்டாடுகிறார்கள். அப்படியானால் அந்த வேதத்திற்கும் தமிழர்களுக்கும் நிச்சயமாக தொடர்பு கிடையாது.

தமிழர்களாகிய நமது வேதம் இறைவனால் பாடப்பட்டது. இறைவனால் பாடப்பட்ட வேதம் எதுவோ அதற்கும் நமக்கும்தான் தொடர்பு உண்டு.
“அற்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை
சொற்றமிழ் பாடுகென்றான் தூமறை பாடும் வாயான்”
என்பது பெரியபுராண வாக்கு. அதாவது தூயமறைகளை எல்லாம் இறைவன் தம் வாயினாலேயே பாடியருளினான் என்கிறார் சேக்கிழார். உடனே நமக்கு சேக்கிழாருக்கு முன்னால் அப்படியாரும் சொன்னார்களா என்று கேட்கத் தோன்றலாம்.

சங்க காலத்தில் கூட வேதம் இறைவனால் பாடப்பட்டது என்றே கூறப்பட்டது. புறநானூற்றில் 166 ஆவது பாட்டில் இது அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.
“நன்றாய்ந்த நீணிமிர் சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”
என்று அப்பாடல் தொடங்குகிறது. சிவபெருமானை முதுமுதல்வன் என்று அப்பாடல் கூறுகிறது. அந்த முதுமுதல்வனாகிய சிவபெருமானின் திருவாயிலிருந்து மறைகள் நீங்காமல் வந்து கொண்டிருக்கிறதாம். ஒரு வேதம் சிவபெருமானால் அருளப்பட்டது என்று சங்க காலம் முதல் சேக்கிழார் வரை கூறப்பட்டது. இன்னொன்று சிவபெருமானால் அருளப்படாமல் தானாகத் தோன்றியது என்று வடமொழியாளர்களால் போற்றிக் கூறப்பட்டு வடமொழியில் உள்ளது. இதிலிருந்து இதுவேறு அதுவேறு என்பது நன்றாகத் தெரிய வருகிறது. ஆனால் நாமோ இதுவரை சிவபெருமான் அருளாத, சுயம்புவாகத் தோன்றிய வடமொழி வேதத்தையே உண்மை வேதம் என்றும் நம்முடைய வேதம் என்றும் கொண்டிருக்கிறோம். பெரியவர்கள் தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும் நம்முடைய மனம் தாவிக் குதித்து அந்த வடமொழி வேதத்திற்குத் தான் போய் நிற்கிறது.

பெருமான் பாடியதுதான் தமிழ் வேதம்; அதுவே நமக்கு வேதம்.


திருஞானசம்பந்தக் குழந்தை ஒரு வினா எழுப்புகிறது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த பெருமானே! ஏதோ வேதம் சொன்னாயே? என்ன என்று சேய்ஞலூரில் கேட்கிறது.
“நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே
சேலடந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே! “
இது சம்பந்தர் திருசேய்ஞலூரில் பாடியருளியது. சேய்ஞலூர் முருகப்பெருமான் குழந்தையாக இருந்து வணங்கிய தலம். அத்துடன் சண்டீசர் குழந்தை வணங்கிய தலம். இங்கே பார்த்தீர்களானால் அருமறை சொன்னதென்னே என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. பதில் இப்பாடலில் இல்லை.

பதிலை வயதான பெரியவர் என்று அழைக்கப்படுகிற சிவபெருமான் தலமான திருமுதுகுன்றப் பதிகத்தில் கூறுகிறார் சம்பந்தர்.
“ சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவவேடம் தானினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே “
அதாவது ‘மாலடைந்த நால்வர் கேட்க’ என்று சேய்ஞலூர் பாடலில் குறிப்பிட்ட சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வரைக் குறிப்பிட்டவர், இந்தப் பாடலில் ‘அழிந்த சிந்தனை அந்தணாளர்’ என்று அவர்களைக் குறிப்பிடுகிறார்.

அங்கே அவர்களுக்கு சொன்ன அருமறை என்னே என்று வினாவி அவாய் நிலையாக (SUSPENSE) விட்டவர் இங்கே அது என்ன என்று விளம்புகிறார். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்றார். இந்த நான்கும் தமிழர்க்கே உரித்தானது என்பதை எல்லா அறிஞர்களும் கூறுகின்றனர். சிவஞான முனிவரும் தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தியுரையில் இவை தமிழுக்கே உரிய பகுப்பு என்று கூறுகிறார்.


எனவே தமிழில் உள்ள அறம், பொருள், இன்பம், வீடு என்பதுதான் நம்முடைய வேதம். இதுதான் நம்முடையது. சுயம்புவான வடமொழி வேதத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை.

இவை ஒவ்வொன்றிற்கும் நூல்கள் தமிழில் பலவுண்டு. சிலவற்றைப் பார்ப்போம்.
அறம்: 18 நூல்கள் உண்டு. அவை பதிணெண் கீழ்க் கணக்கு எனப்படும் அறநூல்கள், அதில் ஒன்றுதான் திருக்குறள்.
பொருள்: அதாவது உலகியல் அறிவு. பலபேர் பணம் சம்பாதிப்பது மட்டுமே பொருள் என்று நினைக்கின்றனர். இல்லை, நல்ல பெயரைச் சம்பாதிப்பதும் பொருள்தான். அதற்கு உலகியல் அறிவு வேண்டும். திருக்குறளில் பொருட்பால் என்ற ஒரு பிரிவே உண்டு. காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே சென்ற சாணக்கியனின் அர்த்த சாஸ்திரமே ‘காஞ்சிபுரத்தில் அவன் ஆராய்ந்த தமிழ் நூல்களின் பிழிவே’ என்பது சரித்திர ஆசிரியர்கள் கருத்து.
இன்பம்: அகத்துறை. இது தமிழர்களுக்கே உரித்தானது. இதன்பால் தமிழ்ச் சங்க நூல்கள் ஏராளம். அவ்வளவு ஏன்? சிவபெருமானே ‘இறையனார் களவியல்’ என்ற அகத்துறை நூல் செய்திருக்கிறார்.
வீடு: துறவு பற்றியும் மெய்யுணர்வு பற்றியும் திருக்குறளில் இயலாகவும், அதிகாரமாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழிலக்கணமான தொல்காப்பியத்தில் தாபத பக்கம் பேசப்படுகிறது. இதற்கென காஞ்சித்திணை என்று ஒரு திணையே வகுக்கப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சி என்பது பத்துப்பாட்டில் ஒன்று.

இந்த நாலும்தான் வேதம். இந்த நான்கையும் தனித்தனியாக ஆராயும் நூல்கள் தமிழில் இருக்க இந்த நான்கையும் ஒன்றாகக் கூறுவது திருக்குறள்.

ஆக திருக்குறள் உள்ளிட்ட அறம், பொருள், இன்பம் வீடு பற்றிய நூல்கள்தான் நம்முடைய வேதம் என்று உணருவோம்.

காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு நாம் ஏன் இடறவேண்டும்?

கோயில்களும் வடமொழி வேதமும்

கோயில்களும் வடமொழி வேதமும்


வடமொழி வேதங்களான இரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களில் எந்த இடத்திலும் கோயிலைப்பற்றிய பேச்சே கிடையாது என்பதை புகழ்பெற்ற தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் உட்பட பல வேத விற்பன்னர்கள் உறுதியாக அறிவித்துள்ளனர் சில கீழே காண்க:
The Vedic Aryans Possessed No Temples and used no Images. The Dravidian culture promoted image worship and insisted puja in place of yogna..
- RELIGION AND SOCIETY III – Dr.RADHAKRISHNAN





உண்மையில் 50 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கோயிலுக்கும் நுழையாத அத்வைத வேதாந்திகள் இருந்துள்ளனர். வேதத்தின் முடிந்த முடிபாகிய வேதாந்தமும் ஆகம வழிபாட்டு நெறியைக் கண்டிக்கிறது.
- தமிழர் வரலாறு – பி.டி.சீனிவாச ஐயங்கார்.








ஆகம நெறி, வைதிக நெறிக்கு (சமஸ்கிருத வேத காலத்துக்கு) முற்பட்ட பழமை வாய்ந்தது இன்று ஆகம நெறி வைதிகக் கலப்புக்கு உட்பட்டிருப்பினும் இது தனித்ததோர் நெறியேயாம். சமஸ்கிருதத்தில் பூஜா எனப்படும் சொல் தமிழ் மொழியிலிருந்து வந்ததே. இதன் மூலம் – பூ-மலர்-என்பதேயாம். பூவால் செய்யப்படுவது பூசெய் – பூசெய் என்பதே பூஜா, பூஜை என வழங்கப்படுகிறது.
- HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE – S.K.CHATTERJEE




பிற்காலத்தில் வைதிகர்களும் ஆகம நெறிக்கு உரியதான படிம வழிபாடு அதாவது விக்கிரக் வழிபாடு என்பதை மேற்கொண்டபோது அது கூடாது என்று மறுத்து எழுந்ததே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்கள் என்பதும் கோயில்களுக்கும் வடமொழி வேதத்திற்கும் தொடர்பில்லை என்பதை ஆணித்தரமாக அறைந்து கூறுவதாகும்.








பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் தமிழ்ப்பாடல்கள் பெற்றவை தாமே ஒழிய இன்றுவரை வடமொழிப்பாடல் பெற்ற தலம் என்று ஒன்றுகூட இல்லாததும் இதை நிறுவும்.




(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)

‘ஐ’ யை மீட்ட ஐயன்


பல தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்த எழுத்து என்ற முறையில் மறைந்து போய் விட்டன. உயிரெழுத்தில் ஒன்றான ‘ஐ’ என்ற எழுத்திற்கும் சீர்திருத்த எழுத்து முறையால் ஆபத்து வந்தது. அது போயிருந்தால் உயிரெழுத்துக்கள் மொத்தம் 12 ல் இருந்து 11 ஆகி இருக்கும். ஆனால். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இதற்கு புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

அமரர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக, எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்த நேரம், இது பற்றி பேச வாரியார் சுவாமிகள் முதல்வரை பார்க்கச் சென்றார். வாரியார் தம் அலுவலகத்திற்கு வந்ததை கேள்விப்பட்ட முதல்வர், வராண்டாவிற்கே ஓடோடி வந்தார். “சுவாமிகள் சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே” என்று சொன்னார்.


வாரியார் சுவாமிகள் சொன்னார்: “அப்பா! ஒரு ஆர்டர் போட்டு தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தாயே. அதில் மறைந்து போன ஏனைய எழுத்துக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ‘ஐ’ என்பது மிகப் பெரிய சிறப்பெழுத்து”

“ஐ என்பது தமிழில் ஒர் எழுத்து மட்டுமல்ல; ஓரெழுத்தொரு மொழி. அரசன், திருமகள், கடவுள் ….. என்று பலபொருள் ஒரு மொழி அது. ஒரு பாடல் சொல்கிறேன் கேள்:

“குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்”

இதில் தனிவேலை நிகழ்த்திடலும் என்பது தனிவேல் + ஐ நிகழ்த்திடலும் என்று பிரிந்து பொருள் தரும். தனிவேல் உடைய கடவுளாகிய முருகப் பெருமான் நிகழ்த்திடலும் என்று பொருள்.”

“இந்த ‘ஐ’ என்பதை நீ எடுத்து விட்டாயே!
இனி இதற்கு நான் என்ன பொருள் சொல்வது?” என்று கேட்டார்.

முதல்வர் எம்.ஜி.ஆர் உடனே ‘ஐ’ எழுத்து மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்று மறு ஆணை போட்டார். அதனால் ‘ஐ’ என்ற எழுத்து தப்பியது. இதை மீட்டுக் கொண்டு வந்தவர் வாரியார் சுவாமிகள்.

தமிழா, வழிபடு ! தமிழ் வழிப்படு !!


1. தமிழ் ஒன்றுதான் தெய்வத்தமிழ் எனப்படும் மொழி. தெய்வ இந்தி, தெய்வ ஆங்கிலம் என்றெல்லாம் வழக்கில் இல்லை. சமஸ்கிருதம் தெய்வத்தின் மொழியல்ல; தேவர்களின் மொழி என்கிறார்கள்.


2. “ஓம்” என்கிற ஓங்காரத்தின் பொருளை தமிழ்க்கடவுள் எனப்படும் முருகன் சிவபெருமானுக்கு கொஞ்சு தமிழால் விரித்துரைத்தான் என்பது வரலாறு. (கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய கொஞ்சித் தமிழால் பகர்வோனே” – திருப்புகழ்)

3. தெய்வம் எல்லா மொழிகளுக்கும் பொது; ஆனால், அந்தத் தெய்வம் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழிக்குச் சங்கம் கண்டது என்று 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மூன்றாம் தமிழ்ச் சங்க நூலான இறையனார் களவியல் உரைநூல் சான்று பகர்கிறது.

4. உலகை உருவாக்க உயர்நிலை உயிர்களான சதாசிவர்களைப் பணிகொள்ள இறைவனால் கற்பிக்கப்பட்ட முதல்மொழி தமிழ் என்று வள்ளலார் ‘தமிழ்’ என்ற சொல்லுக்கு எழுதிய விரிவுரையில் உறுதிபட உரைக்கின்றார்.

5. ‘முத்தியை, ஞானத்தை, முத்தமிழ் ஓசையை’ என்று இறைவனே முத்தமிழ் ஓசையாக உள்ளவன் என அடையாளம் காட்டுகின்றார், திருமூலர் – தமிழ் மூவாயிரமாம் திருமந்திரத்தில்.

6. கோயில்கள் எல்லாம் தமிழன் கண்டவை; தமிழ்நாட்டில் உள்ள 1008 சிவாலயங்களும், 108 வைணவத்தலங்களும் இதற்குச் சான்று. தமிழகத்தைத் தாண்டினால் இந்தியாவில் சொல்லும் தரத்தில் பெரிய கோயில்கள் ஏதும் இல்லாததும் இதை உறுதிப்படுத்தும். தமிழக அரசின் முத்திரையில் கோயில் இடம் பெற்றிருப்பதும் இதற்கு மேலும் ஒரு வலிய சான்று.


7. வடக்கே கைலாயத்தில் உள்ளதாகக் கூறப்படும் சிவபெருமான் தெற்கே தமிழ் நாட்டைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழின் இனிமை.

8. தமிழிசையின் இனிமை ஆகியவற்றிற்காக ஏங்கி இறைவன் தெற்கே தில்லைக்கு வந்து கூத்தாடினானாம், ஆடும்போது களைப்பு தீர இடையிடையே தென்றலின் சுகமும் பெறலாம் எனத் தெற்கிற்கு வந்ததாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

9. தமிழகத்தைத் தாண்டி வடக்கே நடராசருக்குக் கோயில் கிடையாது. தென்னாட்டில் தன் சைவம் உருவானதாக காரண ஆகமம் கூறுகிறது. எனவே சிவன் தென்னாடுடைய சிவனானான்.

10. தமிழகக்கோயில்களில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை தமிழில்தான் வழிபாடுகள் நடந்தன என்று திருஞான சம்பந்தர் பல பாடல்களில் பதிவு செய்திருக்கிறார். (உ-ம்: “செந்தமிழர் தெய்வமறை நாவர்”, “ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் தொழுதேத்தும் தில்லை”)

(நன்றி : தெய்வத்தமிழ் அறக்கட்டளை, ஆதம்பாக்கம், சென்னை)

நான் ஏன் பிறந்தேன் ? - திருமூலர்




திருமூலர் திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை. தமிழர்க்கு முத்தான பொதுமறை. அதில் வரும் ஒரு பாடல், விளக்கத்துடன்.
பாடல் எண்: 81
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.

விளக்கம் :
பிறவி துன்பம் தருவது.
இருந்தும் மீண்டும் மீண்டும் ஏன் பிறக்கிறார்கள் ?
பிறவி தொடர்வது ஏன் ?
இப்படி மீண்டும் மீண்டும் பிறப்பவர்கள் எல்லாம், முன் பிறப்பில் முறையாகத் தவம் செய்யாதவர்கள்தான்.
தவம் செய்யத்தவறியவர்களுக்குத்தான் பிறவி தொடரும்.
ஆனால், நான் பிறந்திருக்கிறேனே ! எப்படி ?
நான் பிறக்கவில்லை. இறைவனால் பிறப்பிக்கப்பட்டேன்.
மோன நிலையில்(மொழி கடந்த நிலையில்) இறைவனால் எனக்கு உணர்த்தப் பட்டதை நன்றாகத் தமிழ்ப் பாக்களால் பாட இறைவன் என்னைப் படைத்துள்ளான்.
அதற்காகத்தான் இறைவன் இந்தப்பிறவியைத் தந்துள்ளான்.

தெய்வத்தமிழுக்கு அடைமொழிகள்

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் போன்றோர் தமிழகத்தில் ஊர் ஊராகச் சென்று தமிழைப் பரப்பினர்; தமிழ் இசையைப் பரப்பினர்; பக்தி இயக்கத்தைப் பரப்பினர்.
திருஞான சம்பந்தர் தெய்வத்தமிழுக்கு சொன்ன அடைமொழிகள்
1 அருந்தமிழ்,
2 ஆரா அருந்தமிழ்,
3 இசைமலி தமிழ்
4 இன் தமிழ்
5 இன்புறுந்தமிழ்,
6 உருவாகும் ஒண்டமிழ்,
7 உரைசெய் தமிழ்,
8 எழுதுமொழி தமிழ்,
9 ஏரினார் தமிழ்,
10 ஒளிர்பூந்தமிழ்,
11 கலைமலி தமிழ்,
12 கலை முத்தமிழ்,
13 குலமார் தமிழ்,
14 குலவேந்தர் செந்தமிழ்,
15 குற்றமில் செந்தமிழ்,
16 குன்றாத்தமிழ்,
17 சங்கமலி தமிழ்,
18 சந்தநிறை தண்டமிழ்,
19 சீர் இன்புறுந்தமிழ்,
20 ஞாலமல்குந் தமிழ்,
21 ஞானத்தமிழ்,
22 தண்டமிழ்,
23 தலமார்தரு செந்தமிழ்,
24 தவமல்கு தமிழ்,
25 திருநெறிய தமிழ்,
26 தளங்கில் தமிழ்,
27 நலங்கொள் தமிழ்,
28 நற்றமிழ்,
29 நாடவல்ல தமிழ்,
30 மாடமலி தமிழ்,
31 பண்ணாருந் தமிழ்,
32 பண்ணியல் தமிழ்,
33 பண்ணுலாம் அருந்தமிழ்,
34 பண்பொலி செந்தமிழ்,
35 பரவிய தமிழ்,
36 பல்பொருள் முத்தமிழ்,
37 பல ஓசைத் தமிழ்,
38 பாரின் மலிகின்ற புகழ்கின்ற தமிழ்,
39 புகழ் வண்டமிழ்,
40 பூந்தமிழ்,
41 பேரியல் இன்தமிழ்,
42 மறைவளருந் தமிழ்,
43 முடிவில் இன்தமிழ்,
44 விலையுடைய அருந்தமிழ்.

தமிழ் ஆண்டுப்பெயர்கள்

தமிழ் ஆண்டுப்பெயர்கள் தமிழில்


நற்றோன்றல் 1 பிரபவ
உயர்தோன்றல் 2 விபவ
வெள்ளொளி 3 சுக்கில
பேருவகை 4 பிரமோதூத
மக்கட்செல்வம் 5 பிரசோற்பத்தி
அயல்முனி 6 ஆங்கிரச
திருமுகம் 7 ஸ்ரீமுக
தோற்றம் 8 பவ
இளமை 9 யுவ
மாழை 10 தாது
ஈச்சுரம் 11 ஈஸ்வர
கூலவளம் 12 வெகுதான்ய
முன்மை 13 பிரமோதி
நேர்நிரல் 14 விக்ரம
விளைபயன் 15 விஜூ
ஓவியக்கதிர் 16 சித்ரபானு
நற்கதிர் 17 சுபானு
தாங்கெழில் 18 தாரண
நிலவரையன் 19 பார்த்திப
விரிமாண்பு 20 விய
முற்றறிவு 21 சர்வசித்
முழுநிறைவு 22 சர்வதாரி
தீர்பகை 23 விரோதி
வளமாற்றம் 24 விக்ருதி
செய்நேர்த்தி 25 கர
நற்குழவி 26 நந்தன
உயர்வாகை 27 விசய
வாகை 28 சய
காதன்மை 29 மன்மத
வெம்முகம் 30 துன்முகி
பொற்றடை 31 ஏவிளம்பி
அட்டி 32 விளம்பி
எழில்மாறல் 33 விகாரி
வீறியெழல் 34 சார்வரி
கீழறை 35 பிலவ
நற்செய்கை 36 சுபகிருது
மங்கலம் 37 சோபகிருது
பகைக்கேடு 38 குரோதி
உலகநிறைவு 39 விசிவாவசு
அருட்டோற்றம் 40 பராபவ
நச்சுப்புழை 41 பிலவங்க
பிணைவிரகு 42 கீலக
அழகு 43 சௌமிய
பொதுநிலை 44 சாதாரண
இகல்வீறு 45 விரோதிகிருது
கழிவிரக்கம் 46 பரிதாபி
நற்றலைமை 47 பிரமாதீச
பெருமகிழ்ச்சி 48 ஆனந்த
பெருமறம் 49 இராட்சச
தாமரை 50 நள
பொன்மை 51 பிங்கள
கருமைவீச்சு 52 காளயுத்தி
முன்னியமுடிதல் 53 சித்தார்த்தி
அழலி 54 ரௌத்ரி
கொடுமதி 55 துன்மதி
பேரிகை 56 துந்துபி
ஒடுங்கி 57 ருத்ரோத்காரி
செம்மை 58 ரக்தாட்சி
எதிரேற்றம் 59 குரோதன
வளங்கலன் 60 அட்சய

தமிழ் ஓகம் 27 (யோகம்)

தமிழ் ஓகம் 27 (யோகம்) - தமிழ் வார்த்தைகளில்

கம்பம் (விஷ்கம்பம்)
விருப்பம் (ப்ரீதி)
வாழ்நாள் (ஆயுஷ்மான்)
மிகுசெல்வம் (சவுபாக்கியம்)
நலம் (ஷோபனம்)
மாகண்டம் (அதிகண்டம்)
அறம் (சுகர்மம்)
துணை (திருதி)
சூலம் (சூலம்)
கண்டம் (கண்டம்)
ஆக்கம் (விருத்தி)
நிலை (துருவம்)
கட்செவி (வியாகதம்)
எக்களிப்பு (ஹர்ஷணம்)
வேல் (வஜ்ரம்)
வல்லமை (சித்தி)
கோறல் (வியதீபாகம்)
மாகாயம் (வரீயான்)
தாழ்வு (பரிகம்)
சிவம் (சிவம்)
திறம் (சித்தம்)
வாய்ப்பு (சாத்தியம்)
மங்கலம் (சுபம்)
தெளிவு (சுப்பிரம்)
நான்முகன் (பிராமியம்)
வேந்தன் (ஐந்திரம்)
கூளி (வைதிருதி)
குறிப்பு:
அடைப்புக்குறிக்குள் இருப்பது வடமொழி. இவையாவும் தமிழுக்கேற்றவாறு வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாக நம் தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ் நாண்மீன் (நட்சத்திரம்)

தமிழ் நாண்மீன் (நட்சத்திரம்) - தமிழ் வார்த்தைகளில்


1 புரவி (அசுவினி)
2 அடுப்பு (பரணி)
3 ஆரல் (கிருத்திகை)
4 சகடு (உரோகிணி)
5 மான்றலை (மிருகசீரிடம்)
6 ஆதிரை (திருவாதிரை)
7 கழை (புனர்பூசம்)
8 வாவி (பூசம்)
9 அரவு (ஆயில்யம்)
10 கொடுநுகம் (மகம்)
11 கணை (பூரம்)
12 உத்திரம் (உத்தரம்)
13 கை (அத்தம்)
14 ஆடை (சித்திரை)
15 விளக்கு (சுவாதி)
16 முறம் (விசாகம்)
17 பனை (அனுஷம்)
18 துளங்கொளி (கேட்டை)
19 குருகு (மூலம்)
20 உடைகுளம் (பூராடம்)
21 கடைகுளம் (உத்திராடம்)
22 ஓணம் (திருவோணம்)
23 காக்கை (அவிட்டம்)
24 செக்கு (சதயம்)
25 நாழி (பூரட்டாதி)
26 முரசு (உத்திரட்டாதி)
27 தோணி (ரேவதி)

குறிப்பு:
அடைப்புக்குறிக்குள் இருப்பது வடமொழி. இவையாவும் தமிழுக்கேற்றவாறு வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாக நம் தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

'திதிகள்' தமிழ் வார்த்தைகளில்

1. ஒருமை - பிரதமை
2. இருமை - துவிதியை
3. மும்மை - திருதியை
4. நான்மை - சதுர்த்தி
5. ஐம்மை - பஞ்சமி
6. அறுமை - சஷ்டி
7. எழுமை - சப்தமி
8. எண்மை - அஷ்டமி
9. தொண்மை - நவமி
10. பதின்மை - தசமி
11. பதிற்றொருமை - ஏகாதசி
12. பதிற்றிருமை - துவாதசி
13. பதின்மும்மை - திரயோதசி
14. பதினான்மை - சதுர்த்தசி
15. மறைமதி - அமாவாசை
16. நிறைமதி - பௌர்ணமி

குறிப்பு:
இவையாவும் தமிழுக்கேற்றவாறு வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாக நம் தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள். மாற்றிவிட்டு ஏதாவது ‘கப்சா கதை’ அடிப்பார்கள்.

ஆனைந்து என்கிற பஞ்சகவ்யம்



வடமொழி அன்பர்கள் பூசை செய்யும் போது ‘பஞ்சகவ்யம்’ வைத்து அபிஷேகம் செய்வார்கள். தமிழில் அதற்குப் பெயர் “ஆனைந்து”. இதுவும் வடமொழி நம் தமிழிலிருந்து “சுட்டதுதான்”.


பஞ்சகவ்யம் என்று அவர்கள் உபயோகிப்பது :
பால், தயிர், நெய், பசுவின் சிறுநீர் மற்றும் பசுவின் சாணம் ஆகிய ஐந்தும்.

தமிழில் ஆனைந்து என்பதற்கு பொருள் காண இயலாமல் பால், தயிர், நெய் என்பதோடு ஐந்து பொருட்கள் வர இன்னும் இரண்டிருக்கிறதே என்று எண்ணி ஆவின் சிறுநீரையும் சாணத்தையும் தவறாக இணைத்திருக்கிறார்கள்.

சேக்கிழார் சண்டேசுவர நாயனார் புராணத்தில் பசுவின் மடியைச் சிறப்பித்து…
“ஆயசிறப்பினாற் பெற்ற அன்றே மன்றுள் நடம்புரியும்
நாயனார்க்கு வளர்மதியும் நகுவெண் டலைத்தொடையும்
மேயவேணித் திருமுடிமேல் விரும்பி ஆடிஅருளுதற்குத்
தூயதிருமஞ் சனம்ஐந்தும் அளிக்கும் உரிமைச்சுரபிகள்தாம்”
என்று பாடியருளுகிறார்.


ஆக பசுவின் மடியில் இருந்து சுரக்கும் பொருள் ஐந்தும் திருமஞ்சனம் என்றும் அவையே அபிடேகத்திற்கு உரியவை என்றும் திருமஞ்சனத்திற்கு ஐந்து பொருள்களை பசுவின் சுரபியாகிய மடி கொடுக்கிறது என்றார்.



சாணமோ, சிறுநீரோ பசுவின் மடியிலிருந்து வருவதல்ல.அவை கழிவுப்பொருள்கள். சுரப்புப் பொருள்களல்ல.



எனவே, பசுவின் மடியில் இருந்து சுரக்கும் பால் பொருளிலிருந்துதான் நாம் ஐந்தைக் கொள்ள வேண்டும். பசுவின்பால் திரிந்து ஐந்து பொருட்களை நமக்கு அளிக்கிறது. 1) பால், 2) தயிர், 3) மோர், 4) வெண்ணைய், 5) நெய்.

(நன்றி: செந்தமிழ் சிவாகம பூசை செய்வது எப்படி? புத்தகம்)

புறநானூறும் சிவபெருமானும்




புத்துணர்வும் புதுவாழ்வும் பெறத் துடிக்கும் தமிழ்மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம். அதில் கடவுள் வாழ்த்தாக அமைவது ‘அருந்தவத்தோன்’ ஆகிய சிவபெருமானைப் பற்றியது.
இதனைப் பாடியவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’.

பாடல் : 1 – இறைவனின் திருவுள்ளம்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள்ளேறே; சிறந்த
சீர்கெழுகொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை;
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதிணெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரற வழியாகக் கரகத்துக்
தாழ்சடை பொலிந்த அருந்தவுத் தோற்றே

பாடலின் விளக்கம்:-
சிவபெருமான் தலையில் சூடிக்கொள்வது கார் காலத்தில் மலரும் கொன்றைப்பூ;
அவனது அழகான வண்ண மார்பில் அணிந்து கொள்வதும் கொன்றைப்பூ.
அவன் பயணம் செய்யும் வாகனம் தூய்மையான வெள்ளை எருது.
அவனது பெருமை பொருந்திய சிறந்த கொடியும் அவ் வெள்ளை எருதே என்பர்.
நஞ்சினது கறை அவனின் கழுத்தை அழகு செய்தலும் செய்தது.
அக் கறை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறையை ஓதும் சான்றோர்களால் புகழவும் படுகிறது.
பெண் உருவை ஒருபாகத்திலே அறியக் காட்டியவன் அவன்.
அவ்வுருவைத் தன்னுள் அடக்கி ஒளித்துத் தானாக அவன் தனித்தும் விளங்குகின்றான்.
அவனது நெற்றிக்கு பிறை வனப்பைத் தருகிறது.
அந்தப் பிறையை பதினெட்டு தேவர்களும் போற்றவும் செய்கிறார்கள்.
எல்லா உயிர்க்கும் காவல் தெய்வம் அவன்.
நீர் வற்றுதல் இல்லாத கமண்டலமும் அவன் கையில் உள்ளது.
தவமுதிர்ச்சியின் அடையாளமாக அவன் தாழ்சடை திகழ்கிறது.

பாடலின் உட்கருத்து :-
சிவமாகிய முழுமுதற்பொருளின் தன்மை மிகவும் போற்றுதற்கரியதாகும். சிவபெருமானுடைய தலையையும் மார்பையும், வாகனத்தையும், கொடியையும் கூறி, அவனுடைய பெருங்கருணையையும் வியந்து பெண்ணும் ஆணும் தானேயாகித் திகழும் தன்மையையும் போற்றுகிறது இந்தச் செய்யுள். அவனைச் சார்ந்த தேய்ந்த பிறையும் பதினெட்டு தேவர்களால் போற்றப்பெரும் பெருநிலை எய்திற்று எனச் சொல்லி அவனை நாமும் அடைந்தால் அதனால் நமக்கும் அத்தகு மேம்பாடு வந்தடையும் எனச் சொல்லாமற் சொல்லி, இத்துணை மேதகு நிலையிலும் அவன் தவத்தோனாக விளங்குகின்றான் எனத் தன்னையுணர்ந்து தனித்து அடங்கும் அழகையும் அறிவுறுத்துகிறது இச் செய்யுள்.

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.


மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.

நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு

இதில்,
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.
சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.
வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது


நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம்

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.
1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

नमःशिवाय

இதில் வரும்: என்ற குறியீடு வடமொழி நெடுங்கணக்கில் ஓர் எழுத்து ஆகும். (அதாவது வடமொழி अ, आ, इ, ई, उ, …) (தமிழில் அ, ஆ, இ, ஈ … போல ).
இதை மறைப்பதற்கு அவர்கள் தமிழ் நமசிவாய வை

நம:சிவாய

என வடமொழி எழுத்தான : சேர்த்து எழுதுகிறார்கள்.
என்ன காரணம் எனில் அதை ஒரு நிறுத்தற்குறியீடு போலக் காட்ட
: இந்த நிறுத்தற்குறியீடு (PUNCTUATION MARK) க்குப் பெயர் முக்காற்புள்ளி (COLON).

(சான்று:-
தமிழ் நிலங்கள் ஐந்து வகை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
இதைப் போன்ற இடங்களில் இந்த நிறுத்தற்குறியீட்டைப் பயன்படுத்துவார்கள்.)

நமசிவாய நடுவில் : எதற்கு?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.
(ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள வேத மந்திரங்கள் புத்தகத்தில் உள்ள கீழ்வரும் செய்தியைப் பார்க்கவும்)
யஜுர் வேதம் 4.5.8.1
“ ஓம் நம சம்பவே ச மயோபவே ச நம சங்கராய ச மயஸ்கராய ச நம சிவாய ச சிவதராய ச ஓம் ”
விளக்கவுரை:-
உலக இன்பமாகவும் மோட்ச இன்பமாகவும் இருப்பவரும், உலக இன்பத்தையும் மோட்ச இன்பத்தையும் தருபவரும் மங்கல வடிவினரும், தம்மை அடைந்தவர்களை சிவமயம் ஆக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.”
ஆக தமிழ் ஐந்தெழுத்து மூலமந்திரமான நமசிவாய வுக்கும் வடமொழியில் சொல்லப்படும் நமஹ்சிவாய வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.

வணிக நிலையங்கங்களுக் கான தமிழ்ப் பெயர்கள்:



பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சால ை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு,இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம்அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி :நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில் , காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் :வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்...


பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்




அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
நுங்கல் - முழு
வதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

Sunday 12 October 2014

சில ஊர்களின் முழுமையான & பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.

தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது
பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது
எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது
குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது
உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?
ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது
ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்
விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே
வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல
தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே ,இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார்
கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்" ஆகும்
பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது
மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,
குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்
நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்
நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.
வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.
தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.
மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்
ஏர்க்காடு
சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.
திருகோணமலை
இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்
கோணமாமலை....
என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்.

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்‬ ....

வளையல் (காப்பு) கையில், மணிக்கட்டில் அணியப்படும் ஓர் ஆபரணம்

கருப்பைக்குள்ளிருந்து கதவைத்திறக்க காத்துக்கொண்டிருக்கும் குழந்தையோடு வெளியிலே இருந்தே விளித்துப் பேசும் உக்தி தான் இந்த வளைகாப்பு. நான் யார்? எங்கே இருக்கிறேன்? யாருக்குள் இருக்கிறேன்? யாரோடு இருக்கிறேன்? யாரெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்? என்ன நடக்கிறது என்னைச் சுற்றி? என்றெல்லாம் வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு!
இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்....!
நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்களும் தனி ஒரு மனிதரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வந்ததாக இருந்ததில்லை. பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.
பொதுவாக கர்பினிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து ஆறாவது முதல் எட்டாவது மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு ஜான் குளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது. உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.
நம் கலாச்சாரத்தில் எந்த ஒரு துவக்கத்தையும் முடிவையும் முத்தாய்ப்பாக நினைத்து கொண்டாடுவது வழக்கம். கருவாய் உருவாகி உதிப்பது முதல் உருவற்று அழிந்து நீர்த்துப்போகும் மறைவு வரை அத்தனையையும் தெய்வீகமாக நினைத்து கொண்டாடுவதே
நமது பழக்கம். ஏனெனில் நாம் எதையும் முழுவதுமாக முற்றுப்பெறுவதாக நினைப்பதில்லை.
அது போல ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன்னைச் சுற்றி நாங்கள் தான் இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகப்பு.
சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள். விளக்கொளி குழந்தைக்குத்தெரியுமா? தெரியும், தாயை பாதிக்கும் ஒளி, உஷ்ணம், ஒலி என எல்லாவற்றையும் குழந்தை உணர முடியும்.
மிகச் சமீபத்தில் செம்மறி ஆடோன்றில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து மெல்லிசைகளை (பியானோ இசை போன்றவற்றை) கருவில் இருக்கும் குட்டி ஆடொன்று கேட்டு உணர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது...! மனிதனின் கருப்பையும் ஆடுகளின் கருப்பையும் அமைப்பில் கிட்டத்தட்ட ஒத்தவையாக இருப்பதால் இதே நிலை மனித சிசுவிற்கும் உறுதிப்படுத்தக் கூடியதே....!
தாயின் கருவறையில் இருக்கும் போதே குழந்தை கேட்டல் திறனை விருத்தி செய்யத் தொடங்குவதாகவும் தாயின் குரல் என்பவற்றை அடையாளம் கண்டு கொள்வதாகவும் இவ்வாய்வு கூறுகிறது....! அதேவேளை உயர் அளவு சத்தங்கள் கருப்பைச் சுழலில் நுண் அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன் சிசுவின் கேட்டல் திறனையும் பாதிப்படையச் செய்ய சாத்தியம் இருக்கின்றது எனவும் குறிப்பாக அதிகம் இரைச்சல் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் இதனால் பாதிப்படைய சாத்தியம் இருப்பதாகவும் முன்னர் கருதப்பட்டது இருப்பினும் சிலவகை உயர் சத்த அலைகள் கருப்பைச் சூழலினால் வடிகட்டப்படுவதும் இவ்வாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது....!
மிகப்பலகாலமாக இந்த பூமியின் பழங்குடி மக்களாகிய இந்துக்கள் அதாவது நாம் கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்து அவற்றை பற்றி ஆராச்ச்ய் செய்யும் வெள்ளையர்கள் சில முடிவுகளைக் கூறுகிறார்கள். அவற்றை கொஞ்சம் வரிசைப்படுத்தினால் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள சவுகரியமாக இருக்கலாம். இனி அவை!
1. கருவிலிருக்கும் போதே குழந்தைகள் சப்தங்களை கவனிக்கின்றது. அதீத சப்தத்தால் சில சமயங்களில் பாதிக்கப்படுவதும் உண்டு.
2. கருவிலிருக்கும் குழந்தையால் இசையைக் கேட்கமுடியும். ஒரு வயலின் வாசிப்பை விட ட்ரம்ஸ் வாசிப்பின் அதிர்வலைகளை குழந்தை எளிதில் உணர்கிறது.
3. கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது.
4. அமைதியான ஒரு இடத்தில் வாக்குவம் க்ளீனரின் சப்தம் முதல் பக்கெட்டில் தண்னீர் கொட்டும் சப்தம் வரை குழந்தையால் கவனிக்க முடியும்.
5. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சியம் செய்து கொள்கிறது.
6. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது.
7. ஃப்ளாஷ் லைட் அடிக்கப்படும் போது குழந்தை அதனை எதிர் கொள்ளும் முகமாக அசைவதை ஆராய்ச்சிகளின் போது பல தாய்மார்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படி பல ஆராய்ச்சிகள் மூலம் வெள்ளையர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சடங்குளாக கடைபிடித்து கருவிலிருக்கும் போதே புதிதாக வரப்போகும் ஜீவனுடன் உரையாடி உறவாடிப் பழகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான்.
ஆம் அப்படி ஒரு நுட்பமான விஷயத்தை வாழ்ந்தறிந்து கருவிலிருக்கும் குழந்தையோடு எப்படிப்பழகினார்கள் என்பதற்கு சான்று மகாபாரதத்தில் கூறப்படும் அபிமன்யுவின் கதையே சான்று.
மகாபாரதப் போர் துவங்கியபோது, அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு பதினாறு வயது. அபிமன்யுவும் போரில் ஈடுபட்டான். “கௌரவர்களின் சக்கர வியூகத்தை என்னால் உடைத்துக்கொண்டு போக முடியும்“ என்று கர்ஜனை செய்தவாறு உள்ளே நுழைந்து போரிட்டான். எதிரிகளை, எல்லோரும் வியக்கும்படி சின்னா பின்னமாக்கினான். ஆனால் உள்ளே போன அவனுக்கு வெளியே வரத் தெரியவில்லை; மாண்டான்.
சக்கர வியூகப் போர் முறையை யாருமே அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை; வியூகத்தை உடைத்துப் போவதை எப்படிக் கற்றான்? வெளியே வரும் முறையை ஏன் கற்கவில்லை?
அர்ஜுனன் கருவிலிருக்கும் போதே தன் மகனுக்கு போரின் போது சக்ரவியூகத்தை உடைத்து உள்ளே செல்வது எப்படி என்கிற வித்தையை வெளியிலிருந்து பேசிப்பேசியே கற்றுக்கொடுத்து இருக்கிறான். சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல கற்றுக்கொடுத்த அர்ஜுனன் அதிலிருந்து மீண்டு எப்படி வெளியேற வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்காமல் போய்விட்டான் என்கிறது பாரதம். ஆகவே அதை மட்டும் குழந்தையான அபிமன்யூ கற்றுக் கொண்டிருக்கிறான்!
அதெப்படி முடியும் என்று குதர்க்க கேள்வி கேட்பவர்கள், இன்று உலகம் முழுவதும் நடந்து வரும் கருவிலிருக்கும் குழந்தைக்கு பாடம் சொல்லித் தருவது பற்றிய ஆராய்ச்சியை உற்று நோக்கினால் விடை கிடைக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கு பாடம் நடத்தும் பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது. கர்பினிப்பெண்கள் தங்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுதே புத்திசாலியாகப் பிறந்து உலக ஓட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆவலோடு இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்.
இது போன்ற தற்காலச் சான்றுகளே மகாபாரத அபிமன்யூவின் சக்கர வியூகப்பயிற்சி பொய்யில்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாகிறது. நமது இதிகாசங்களையும் சம்பிரதாய சடங்குகளையும் கேலிக்குரியவைகள், மூட நம்பிக்கைகள் என்று சித்தரிப்பவர்கள் அதையே வெள்ளைக்காரன் வேறு பெயரில் எடுத்துச் சொல்லும் போது கேட்டுவிட்டு மண்டையாட்டுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய நகைச்சுவை.
ம்ங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
மஞ்சள் நிற வளையல் இது வாழ்வு தரும் வளையல்
மங்கலப் பெண்குலம் பொட்டு வைத்தே மகிழும்
குங்கும நிறத்தோடு குலுங்கும் திரு வளையல்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
மங்காத பச்சை நிறம் வழங்கும் எழில் வளையல் - தும்பை
மலர் போன்று இரு மனமும் மாசின்றி வாழ்கவென
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
பட்டுப்போலத் தங்கத் தட்டுப் போலே கரும்புக்
கட்டுப் போலக் கிடந்து கண்னைப் பறிறப்பான்
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளை போலே
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் ஆமா
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் - அவர்
கண்ணே முழிக்கிறாரு சும்மா கனைக்கிறாரு
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
எனக்குந்தெரியாது ஒனக்குந்தெரியாது
ஏதேதோ பேசுறாங்க ரெண்டு பேரும் - அதை
வெளக்க முடியாது வெவரம் புரியாது
வேணாண்டி நமக்கது ரொம்ப தூரம் - அடி
ஆமாண்டி நமக்கது ரொம்ப தூரம்
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு
தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு - அவன்
காலாட்டிக் கையாட்டித் துள்ளுறதைப் பாத்துப்புட்டா
கீழே விட மாட்டாரு ஆளு - அவனைக்
கீழே விட மாட்டாரு ஆளு
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
வண்ண வண்ன வளையல்களின் சிறப்பையும் விழாவில் கணவன் மனைவி இருவரின் மன நிலையையும் அழகு தமிழில் விளக்கும் ஒரு அற்புதமான பாடல்
இது....
ஆக கருவிலிருக்கும் குழந்தை என்பது குடும்ப பட்ஜெட் போதவில்லை யென்பதால் கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல. அது ஒரு உயிர். நம்மோடு வாழ, நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்த நம் தாய்மார்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடிக் கொண்டாடி மகிழ்ந்ததே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு என்றால் மிகையாகாது. எனவே நமது தாய்மார்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்.
வரப்போகும் உயிர்களை குதூகலமாக வரவேற்க தயாராவோம்.
வளர்பிறை பஞ்சமியன்று, நக்ஷத்ரம், நாள் நன்கு அமைந்தால் மிகவும் உகந்தது. அல்லது வளர் பிறையில் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கலாம்.
காலையில், மங்கள ஸ்னானம் செய்யவேண்டும். 9 கெஜம், உடுத்தி வளை அடுக்குவது வழக்கம்.
சில குடும்பங்களில் வளைகாப்புக்கு வாங்கின புடவை உடுத்திக் கொள்ளுவதும் உண்டு.
முன்பெல்லாம், மசக்கைக்கு கறுப்பு நிறப் புடவை வாங்குவார்கள். தற்போது, வளைகாப்புக்கு, வாங்குகிறார்கள். இதெல்லாம், அவரவர் இஷ்டத்தையும், சௌகரியத்தையும் பொறுத்தது.
கோலம் போட்ட மணை அருகில், விளக்கு ஏற்றி வைத்து, தட்டில், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம், சர்க்கரை, கல்கண்டு எடுத்து வைக்கவும்.
மணையில் கிழக்கு நோக்கி உட்கார வைக்கவும்.
நாத்தனார் பக்கத்தில் இருந்தால், அவர் மாலை போடலாம்.
சில குடும்பங்களில், வளைச்சட்டியை வளை அடுக்கச் சொல்லுவார்கள். அன்று அவர் தாய் மாமனுக்கு சமானம்.
இல்லாவிட்டால், ஒரு கைக்கு அம்மாவும், மற்றொரு கைக்கு மாமியாரும் அடுக்குவது சில வீடுகளில் வழக்கம்.
இருவரும் அந்த நேரம் இல்லாவிட்டால், வயதில் பெரியார்கள் யார் வேண்டுமானாலும் அடுக்கலாம்.
முதலில், குல தெய்வத்திற்கும், கோவிலில் அம்மனுக்கு சாத்துவதற்கும், சிவப்பு, பச்சை நிற வளைகள் 5, 5 எடுத்து சுவாமி சன்னிதியில் வைக்கவும். சில குடும்பங்களில், கன்னிப் பெணகள் தவறிப்போயிருந்தால், அவர்களை உத்தேசித்து எடுத்து வைப்பதும் உண்டு.
இடதுகைக்கு ஒற்றைப் படையும், வலது கைக்கு இரட்டைப் படையும் அடுக்க வேண்டும், (14, 15 - 21, 22)
முதலில் வேப்பிலைக் காப்பு போட வேண்டும். பொன் கப்பு, வெள்ளி காப்பு போடவேண்டும்.
கடைசியில், கொலுசு வளையோ அரக்கு வளையோ சற்றே சிறிய அளவில் போட்டால், வளைகள் ஓடாமல் இருக்கும்.
மணையில் இருந்து எழுந்ததும் சபைக்கு ஒரு நமஸ்காரம் பொதுவாகப் பண்ண வேண்டும்.
அந்த மணையில், கல்யாணம் ஆகி, கர்ப்பமாகாமல் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, மறு மணை என்று சொல்லி, வளை அடுக்குவது சம்பிரதாயம்.
அதற்குப் பின் ஏற்றி இறக்குவது வழக்கம்.
ஒரு (அளக்கும்) படியில் நிரம்ப நெல் போட்டு, அதில் ஒரு சிறிய விளக்கை ஏற்ற வேண்டும்.
பெண்ணின், உச்சந்தலை, 2 தோள் பட்டைகள், 2 உள்ளங்கைகள், 2 பாதங்கள், வயிற்றில், இடுப்பில், ஒவ்வொரு வெள்ளி நாணயம் வைக்க வேண்டும். ஒவ்வொருவராக 5 சுமங்கலிகள், பென்ணுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, காலில் நலங்கு வைத்து, தலியில் பூ வைத்துப், படியால், மேலிருந்து பாதம் வரை ஏற்றி இறக்க வேண்டும்.
மூன்று முறை வலமாகவும் பின் இடமாகவும், சுற்றி கீழே வைக்கவும். பிறகு பென்ணை நமஸ்காரம் பண்ணச் சொல்லி, குனிந்ததும், இடுப்பில், பூவும் அக்ஷதையும் கலந்து தெளிக்கவேண்டும். இதற்கு அச்சுதம் தெளிப்பது என்று பெயர்.
பின்னர் ஆரத்தி எடுக்க வேண்டும்.
வந்தவர்கள் எல்லோர்க்கும் வளை கொடுப்பது வழக்கம்.
5 வித பக்ஷணங்கள் செய்ய வேண்டும்.
ஒரு ஜோடி பருப்பு தேங்காய், வறுபயறு (பொரிகொள்ளு அல்லது வரவரிசி), திரட்டு பால் தவிர ஒரு உப்பு பக்ஷணமும், ஒரு ஸ்வீட்டும் செய்யலாம்.
வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் சிறிது வறுபயறு கொடுப்பது வழக்கம்.
சாப்பட்டிற்குச், சித்திரான்ன வகைகள் செய்ய வேண்டும். வளைகாப்புப் பெண் சாப்பிட உட்கார்ந்ததும், அந்தப் பெண்ணின் மடியில், ஒரு மிகச் சிறிய ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் உட்கார்த்தி, ஒரு அப்பளத்தில், சிறிது சாத வகைகளை வைத்துக் கொடுப்பதும் உண்டு .
மாலையில், மணையில் வைத்துப் பாடுவது அவரவர் ஸௌகரியத்தைப் பொறுத்தது.
மாமியாரோ, மற்ற புக்ககத்து உறவினர்களோ வந்தால், பணமோ, ரவிக்கைத் துணியோ கொடுப்பது வழக்கம்.
அவரவர் வசதியைப் பொறுத்து செய்யலாம்.