Sunday 11 May 2014

'வ.உ.சி.கட்டுரைகள்'

'கப்பலோட்டிய தமிழன்' எனப் புகழப்படும் வ.உ.சி எனும் பெருந்தகை கூர்த்த மதி நிறைந்த வழக்குரைஞர்
( இவர் தந்தையும் கூட வழக்கறிஞரே.. ) மட்டுமல்ல , மிகச் சிறந்த தமிழ் அறிஞருமாவார் என நான் முன்னர் சொல்லியிருந்தேன் ;
அன்னார் எல்லாம் என்றும் தமிழுலகு முழுவதற்கும் சொந்தம் ! ஆனால் , இப்பேரறிவாளனை இன்று ஒரு சாதித் தலைவராகக்
குறுக்க முயற்சிப்பதில் என் ஆதங்கத்தையும் அப்போது வெளியிட்டிருந்தேன் ;
பின்னர் , அதை நான் நீக்கி விட்டபோது நீங்கள் அதெல்லாம் இருக்கட்டுமே என்று அபயம் அளித்ததால் இங்கு மீண்டும்...

நிற்க...

வ.உ.சி அவர்கள் தமிழ் மறையாம் திருக்குறள் மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தார்கள் என்பதை கீழே அவர் சொல்லியவை நம் மனதில் நிறுத்தும்...

வ.உ.சிதம்பரனார் ( 1872 - 1936 ) 'வ.உ.சி.கட்டுரைகள்' எனும் நூலில் , " பாயிர ஆராய்ச்சி " எனும் கட்டுரையிலிருந்து...

" தமிழறிகளெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும்.
1330 - குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத் துறந்த முனிவரேயாயினும்,
என்னைப் பெற்ற தந்தயே யாயினும், யான் பெற்ற மக்களேயாயினும்,
யான் அவரைப் பூர்த்தியாய் மதிப்பதுமில்லை ; நேசிப்பதுமில்லை. "

வேறொரு இடத்தில் அவர் எழுதுகிறார்...

"ஆரியமே ஏற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின்
ஓரியலே கற்றாலும் ஓதாராஞ் - சீரடியில்
நூற்பொருளும் வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல் ஒன்றங்
கேற்படநாம் கண்டதுண்டோ இன்று "

இப்பாடல் , வ.உ.சி யின் முதல் அரசியல் கட்டுரையான ' சுதேசாபிமானம்'
மதுரை ' விவேகபானு' எனும் திங்கள் இதழில் 1906- பிப்ரவரியில் ஏழு பக்கங்களில் வெளி வந்தது .


மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன் :

கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவைக் காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டேக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிடப்பட்டது. எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 முழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.
______________________________

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை

சேரநன்னாடு தந்த செம்மலாம் சுந்தரம் பிள்ளை தமிழ் நாடக இலக்கியத்திற்கு ஆற்றிய தொண்டு நிலையானதாகும். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்த இவர், 19 - ம் நூற்றாண்டின் தலை சிறந்த நாடக நூலான "மனோன்மணீ" யத்தைத் தமிழுக்கு அளித்துள்ளார். வேறு பல ஆராய்ச்சி நூல்களையும், நூலக இயல்பற்றிய முதல் தமிழ் நூலான "நூற்றெகை விளக்கம்" என்ற அரிய நூலையும் படைத்தவர். இவர் பாடிய தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் தமிழ் மக்களிடை மிகப் பரவிய பாடலாகும்.

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தவர் சுந்தரம் பிள்ளை. இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய சாத்திர நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராக சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையை தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்பட வகித்தார். 1878இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ் வணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !



நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம் பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீ பெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பெ குறியெனக் குறித்தே.
- சுந்தரம் பிள்ளையின் (மனோன்மணீயம் - பாயிரம்)



தமிழ்ப்பணி:-

சுந்தரனார் ஆங்கிலமொழி அறிவு நிரம்பப் பெற்றவர்.
திருமுருகாற்றுப்படை,
நெடுநெல்வாடை
ஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கில உரைநடையில் வெளிநாட்டார் அறியும்படி அளித்தார். மேலும்,
திருஞானசம்பந்தர் காலம்,
பத்துப்பாட்டு (1891),
முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894),
ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896),
திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897)
ஆகிய ஆய்வுக் கட்டுரை மற்றும் நூல்களை அளித்தார்.
நூற்றொகை விளக்கம் (1885,1889),
மனோன்மணீயம் (1891),
நம்பியாண்டார் நம்பி கால ஆய்வு,
பொதுப்பள்ளியெழுச்சி,
நற்றாயின் புலம்பல்,
சிவகாமி சரிதம்
ஆகிய நூல்களைத் தமிழில் படைத்தார்.
சீவராசிகளின் இலக்கணமும் பிரிவும் (1892),
மரங்களின் வளர்ச்சி (1892),
புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892)
ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.

இவருடைய குடிமைப் பண்புகள் கண்டு, ஆங்கில அரசு "இராவ் பகதூர்" விருதை (1896) அளித்தது. கிராண்ட் டஃப் என்ற ஆங்கில அறிஞர் இவருடைய வரலாற்றுப் புலமை உணர்ந்து, அரசுக்குரிய வரலாற்று ஆராய்ச்சிக் கழக உறுப்பினர் தகுதிக்குப் (Fellow of Royal Historical Society)பரிந்துரைத்தார். திருவாங்கூர் அரசர் வரலாறு எழுதியதால் அரசருக்குரிய ஆசிய ஆராய்ச்சிக் கழக உறுப்பினராக (Fellow of Royal Asiatic Society) ஏற்றுக் கொள்ளப்பட்டார். இவருடைய பணிக் காலத்தில் 1891 முதற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக (Fellow of Madras University) ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதனால்
இலக்கியம்,
வரலாறு,
தத்துவத் துறைப்
பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தேர்வாளராக உயர் பணி புரிந்தார்.

சுந்தரனார் எம்.ஏ. தேர்வு எழுதும்போது பம்மல் விஜயரங்க முதலியார் வீட்டினில் தங்கித் தயார் செய்தார்.

சாமிநாதப் பிள்ளை,
வலிய மேலெழுத்து திரவியம் பிள்ளை,
சுப்பிரமணிய பிள்ளை
ஆகியோருடைய நட்புறவால் திருவனந்தபுரத்தில் "சைவப் பிரகாச சபை"யை ஏற்படுத்தி, 1885ல் அதற்கு ஒரு கட்டடம் கட்டினார்கள். அந்தக் கட்டடம் இன்றும் உள்ளது. இங்குதான் விவேகானந்தருடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, ஒரு திராவிடன் என அவரிடம் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார்.

அன்று கல்வி உலகினில் புகழொளி பெற்றுத் திகழ்ந்த,
பூண்டி அரங்கநாத முதலியார்,
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி,
அரங்காச்சாரி,
உ.வே.சாமிநாதய்யர்
ஆகியோருடன் சுந்தரனார் நட்பு கொண்டிருந்தார். அருட் தந்தை ஜி.யு. போப்புடன் இடையறாத நட்பும் தொடர்பும் கொண்டு இருந்தார்.

சுந்தரனார் தத்துவயியலாளரும், வேதாந்தியும் ஆவார். அதோடு சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும், வரலாற்று அறிஞரும் கூட. இந்த முறையிலேயே திருவாங்கூர் மற்றும் சென்னை இராசதானியில் உயர்வாக அறியப்பட்டிருந்தார். இந்தத் துறையினில் இவரது ஆய்வுகளை "Tamilnadu Antiquary", சென்னை கிறித்தவக் கல்லூரி பத்திரிகை ஆகிய இதழ்கள் வெளியிட்டன.

சுந்தரனாரின் தத்துவ, வேதாந்த ஞான குருவாகத் திகழ்ந்த கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் தமது
நிஜானந்த விலாசம்,
சுவானுபவ மஞ்சரி,
ஸ்வானுபூதி இரசாயனம்
ஆகிய நூல்களைப் போதித்தார். தத்துவராயர் உணர்த்திய பிரம்ம கீதைக்கு உரையும் தந்தார். சுந்தரனார் நிஜானந்த விலாசம் நூலை மாவடி சிதம்பரம் பிள்ளையுடன் சேர்ந்து பதிப்பித்தார். இந்த நூல் இன்றும் உண்டு.
சுந்தரனார் உயிரினப் பரிணாம அறிவை ஆல்ஃப்ரட் இரஸ்ஸல் வாலஸ் எழுதிய டார்வினியம் நூலின் வழி (1889) பெற்றார். விதைகள், மலர்கள், வண்டுகள், புழுக்கள் முதலான உயிர்களின் செயல்களை விளக்குவதற்கு அந்த அறிவை அனுசரித்துக் கொண்டார்.

1894ல் கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.13ம் நூற்றாண்டுத் திருவாங்கூர் (வேணாடு) மன்னர்களின் வரலாற்றைக் கண்டார். தம் பங்கிற்கு 14 கல்வெட்டுகளை கண்டு பிடித்தும் காட்டினார். ஆதி சங்கரர் கொல்லம் ஆண்டிற்கு நான்கு ஆண்டுக்கு முன் மறைந்தார் எனவும் உரைத்தார். சுந்தரனாரின் சாதனையால் திருவாங்கூர் மன்னர் வரலாறு முழுமை கண்டது.

1891ல் சுந்தரனார் தாம் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தை வெளியிட்டார். 1877-78ல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம்
பிரம்ம கீதை,
சூதசம்ஹிதை,
பெருந்திரட்டு
காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் "பரமாத்துவித" என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து திருத்தங்கள் செய்து கொண்டார். இந்த நாடகம்,
தரத்தாலும்,
நுட்பத்தாலும்
கட்டுக்கோப்பாலும்
சிறந்து விளங்குகிறது. மேலும் பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள "நீராடும் கடலுடுத்த நிலமடந்தை" என்ற பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழகம் முழுவதும் இன்றளவும் ஒலிக்கிறது. தேசிய இயக்கம் உருவாகிக்கொண்டுவந்த அந்தக் காலத்தில்,
மொழி அபிமானம்,
தேச அபிமானங்களைக்
கொள்கைப் பற்றோடு புலப்படுத்தினார். அதனால் தமிழ் மக்களிடையே மொழி மற்றும் நாட்டுப் பற்றுகளுடன் இயக்கங்கள் தோன்ற உள்ளொளியாகத் திகழ்ந்தார்.

சுந்தரனாரின் மகன் நடராசன் இந்திய சுதந்திரப் போராட்டம் வீறு கொண்ட போது, 34வது வயதினில் மகாராசா சமஸ்தான எதிர்ப்புப் போராட்டத்தினில் முன்னணியில் நின்றார். இது கண்ட ஆங்கில அரசு அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிட்டது. ஆதலால் அவர் ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டது. ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டாலும் நடராசன் தேசிய ஆன்ம ஒளியோடு திகழ்ந்தார்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897 ஏப்ரல் 26 அன்று மறைந்தார்.

சுந்தரனார் அதி உன்னத வாரிசுச் செல்வத்தையும், வீறார்ந்த இயக்கத் தொடர்ச்சிகளையும் கொண்டு வரலாற்றினில் செம்மாந்த நிலையினில் திகழ்கிறார்.

"தாய்லாந்தில் தமிழ்"

கீழ்க்காணும் படம் ;- தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம்.



தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.. தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ்
மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும்.

அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு,
-------------------------------------------------
1. தங்கம் -> தொங்கம்
2. கப்பல் -> கம்பன்
3. மாலை -> மாலே
4. கிராம்பு -> கிலாம்பு
5. கிண்டி -> கெண்டி
6. அப்பா -> பா
7. தாத்தா -> தா
8. அம்மா -> மே, தான்தா
9. பட்டணம் -> பட்டோம்
10. ஆசிரியர் -> ஆசான்
11. பாட்டன் -> பா, புட்டன்
12. திருப்பாவை -> திரிபவாய்
13. வீதி -> வீதி
14. மூக்கு -> சாமுக்
15. நெற்றி -> நெத்தர்
16. கை -> கை
17. கால் -> கா
18. பால் -> பன்
19. கங்கை -> கோங்கா
20. தொலைபேசி -> தொரசாப்
21. தொலைக்காட்சி -> தொரதாட்
22. குலம் -> குல்
23. நங்கை -> நங்
24. துவரை -> துவா
25. சிற்பம் -> சில்பா
26. நாழிகை -> நாளிகா
27. வானரம் -> வானரா
28. வேளை -> வேளா
29. மல்லி -> மல்லி
30. நெய் -> நெய்யி
31. கருணை -> கருணா
32. விநாடி -> விநாடி
33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்
34. கணம் -> கணா
35. விதி -> விதி
36. போய் -> பாய்
37. சந்திரன் -> சாந்
38. ரோகம் -> ரூகி
39. தூக்கு -> தூக்
40. மாங்காய் -> மாங்க்
41. மேகம் -> மேக்,மீக்
42. பிரான், -> எம்பிரான் பிரா
43. யோனி -> யூனி
44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு -> சான்க்
46. தானம் -> தார்ன்
47. பிரேதம் -> பிரீதி
48. நகரம் -> நகான்
49. பார்வை -> பார்வே
50. ஆதித்தன் -> ஆதித்
51. உலகம் -> லூகா
52. மரியாதை -> மார-யார்ட்
53. தாது -> தாட்
54. உலோகம் -> லூகா
55. குரோதம் -> குரோதீ
56. சாமி -> சாமி
57. பார்யாள் -> பார்ய
58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய
______________________________

தமிழ் இலக்கியங்களில் ஓசோன் !.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன் !.
தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக
ட்ரோபோஸ்பியர்
(troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர்
(stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர்
(thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)
என அவை அமைந்துள்ளன.இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.
"இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய
ஆகாயமும்." (புறநா - 20)

என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

"செஞ்ஞாயிற்றுச்
செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்." (புறநா -
30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"மயங்கிருங் கருவிய
விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர்
கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்." (புறநா -
365)
என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை" (நத்திங்னஸ்) என்னும் பகுதி. புவிக்கு மேல் இருக்கின்ற
இரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது.

இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

"நிலமிசை வாழ்வர் அலமரல்
தீர
தெறுகதிர்
வெம்மை கனலி தாங்கி
காலுண வாக
சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும்
மருள." (புறநா - 43)
என்னும் பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும். மேலும், முருகக் கடவுளின் ஒரு கை,

"விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது"
என்று திருமுருகாற்றுப ்படை (107) யிலும்,

"சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின்
இணையடி தொழுதோம்"
என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே , மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம்,
காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும். முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும்
சரி அது ஒரு பொருட்டன்று. கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த
செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும் !.அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும் பரவ வழிவகை செய்ய ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்கவேண்டும் !
______________________________

ஆகாய விமானம் – வானூர்தி
ஆகாரம் – உணவு, உண்டி
ஆசனம் - இருக்கை
ஆசித்தல் – விரும்புதல்
ஆசிர்வாதம் – வாழ்த்து
ஆச்சரியம் – வியப்பு
ஆச்சாரம் - ஒழுக்கம்
ஆடம்பரம் - பகட்டு
ஆடி (மாதம்) - கடகம்
ஆட்சேபனை – மறுப்பு, தடை
ஆதங்கம் - மனக்கவலை
ஆதரவு – அரவணைப்பு, களைகண்
ஆதரி – தாங்கு, அரவணை
ஆதாரம் - நிலைக்களம்
ஆத்திசம் - நம்புமதம்
ஆத்திரேலியா - தென்கண்டம்
ஆபத்து – இடுக்கண், இடையூறு
ஆபரணம்- அணிகலன்
ஆப்பிள் – அரத்தி
ஆமோதி - வழிமொழி
ஆயத்தம் – அணியம்
ஆயுள் – வாழ்நாள்
ஆரம்பம் – துவக்கம், தொடக்கம்
ஆரோகணம் – ஆரோசை
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலாபனை – ஆளத்தி
ஆலோசனை - கருத்து
ஆவணி (மாதம்) – மடங்கல்
ஆனந்தம் – மகிழ்ச்சி, களிப்பு
ஆனி (மாதம்) - ஆடவை
ஆன்மா (ஆத்மா) – ஆதன்
ஆஸ்தி – செல்வம்
ஆஷேபி - தடு
_____________________________

பதினாறு பண்புகள்

இயல்பாகத் தோன்றிய இயன்மொழிக்கு பதினாறு பண்புகள் இருக்க வேண்டும்.
அப்பதினாறும் அமைந்த மொழி தமிழ் மொழி மட்டுமே என்று மொழி
வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
முன்மை வியன்மை வளமை மறைமை
எண்மை இளமை இனிமை தனிமை
ஓண்மை இறைமை அம்மை செம்மை
எனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பனெப்
பன்னுவர் மொழிவலர் பாவாணார் தாமே.


தமிழில் பேசுவது மட்டும் அல்ல ...அதனைத் தெளிவாகவும்
திருத்தமாகவும் பேசுதல் இன்னும் நலம் !
அது சரி ; நெற்றிப்பொட்டில் அடித்தாற் போன்றது அக்கடைசி நான்கு வரிகள்...


இது கொஞ்சம் கனமானது... இருந்தாலும் பரவாயில்லை...
இறைவன் என்பது பழந்தமிழ்ச் சொல். இது ' இறு ' எனும் அடியிலிருந்து பிறந்தது.
எல்லா இடங்களிலும் தங்கிய பொருள் என்பது இதன் மூலப் பொருள்.
இறு - இறை - இறைவன் எனக் குறிப்பார் ஒரு பேரறிஞர்.

லத்தீன் மொழியில் உள்ள era எனும் சொல்லுக்கு மனைவி , இறைவி என்பது அங்கு பொருளாகும்.
erus என வழங்கப்படும் சொல்லுக்கும் இதே பொருள்தான்.
erus - a master , owner , Lord என்பது லத்தீன் அகராதி தரும் விளக்கம்.
' era ' என்பது கிரேக்கப் பெண் தெய்வம் குறிக்கும் ஒரு சொல்.
இந்த ' era ' சொல் hera என ஆகும் எனவும் அதே அகராதி சுவடு காட்டுகிறது.

hera - era என்பதுடன் Hera - the Greek goddess identified with Roman juno என லத்தீன் அகராதி விளக்குவது காணத்தக்கது.
இதிலிருந்தே Hero வும் ; கடவுளின் அருள் பெற்றவன் என்பதே இதற்கு மூலப்பொருள்.
Hercules எனும் ஆங்கிலச் சொல்லின் கிரேக்க வடிவம் Herakles என்பதே.
தெய்வ வல்லமை மிக்கவனாக அவன் ஆண்டுக் கருதப்படுகிறான்.

ஆக, தெய்வம் குறிக்கும் hera சொல் , தமிழின் era வோடு உறவானது !
அனைத்திற்கும் வேர்ச் சொல் ' இறு ' !!
------------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் வாழும் இப்புவிக்கு தமிழில் பல சொற்கள் உண்டு.
இவற்றுள் ' தாலம் ' என்பதும் ஒன்று !
தாலம் எனில் that which is suspended in space - இப்பொழுது தெளிவாகிறது இல்லையா...!?
புவியை யானைகள் , ஒரு மகாபலசாலி தாங்குவது என்பது போன்ற கற்பனைகள் எல்லாம் மேலோங்கி
இருந்த காலத்தில் இச்சொல் உருவாகியுள்ளதைக் காண்கையில் நாம் சற்று கர்வம் கொள்ளலாம் !

' தாலி ' என்பதும் தொங்குவது என்ற பொருளில்தான் ...
இப்பத் திகைப்பாய் இருக்கு இல்லை...

மேலே உள்ள சொல் விளக்கம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஆழ்ந்த கருத்துகளை ,ஆரவாரமின்றி , அமைதியாக,
ஆற்றொழுக்கான நடையில் ஒருவர் ஆற்றிய நான் கேட்ட ஒரு சொற்பொழிவிலிருந்து...

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!
______________________________

தமிழ்த்தாய் வாழ்த்து


நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !

உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! -- மனோன்மணியம் சுந்தரனார்

Meaning:

அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல்

அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

நெல்லிக்கனி!



மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!
-தாரகா-

"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்"
-ஆசான் தேரையர்-

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய
தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்’ என்று நெல்லிக்கனியைச் சொல்லுவது முற்றும் பொருந்தும். உள்ளங்கை நெல்லிக்கனி’ என்னும் சொல்தொடர் மிகவும் பிரசித்தமானது. நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு எத்தனை விதமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பொதுவாகத் தெரிந்ததே.

ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்துக்கு மூலக் காரணம் அவனுடைய உடம்பில் ஓடும் சுத்த ரத்தந்தான். இந்த ரத்தத்தில் அந்நியப் பொருள்கள் கலந்துவிட்டால் ரத்தம் கெட்டுவிடுகிறது. ரத்தம் கெட்டு விட்டல் வியாதிகள் உண்டாகின்றன. அவற்றைத் தடுக்கும் அல்லது எதிர்க்கும் சக்தி சரீரத்தில் குறைந்துவிடுகிறது. இதன் விளைவு, இளமையிலேயே முதுமைதென்படுகிறது. அந்த அந்நியப் பொருளே அமிலம் என்பது மனிதனின் ஆரோக்கியத்துக்குக் கடுமையான எதிரியான யூரிக் அமிலம் இதில் நிறைய இருக்கிறது.

ஆப்பிள், ஆலிவ், நெல்லிக்காய் இந்த மூன்று பொருள்களும் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை அப்புறப்படுத்தும் சக்தி வாய்ந்தவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நெல்லிக்காய் நம் தேசத்தில் எக்காலத்திலும் எவ்விடத்திலும் ஏதோ ஓர் உருவத்தில் சுலபமாகக் கிடைக்கிறது.

ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே ஆயுர்வேத சாஸ்திரத்தில் நெல்லிக்காயை மிகவும் புகழ்ந்து சொல்லி இருக்கிறார்கள். இதை ஒரு ரசாயனம் என்றே சொல்லுகிறார்கள். எந்த வஸ்து எக்காலத்திலும் எந்த உருவத்திலும் எல்லாருக்கும் உபயோகமுள்ளதாக இருக்கிறதோ, எது சரீரத்தின் ஒவ்வோர் அங்கத்துக்கும் புத்துயிர் தருகிறதோ, எது எல்லா வியாதிகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்திருக்கறதோ, எது ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியதோ, அதை ரசாயனம் என்கிறார்கள். இந்த எல்லாக் குணங்களும் பொருந்தியது நெல்லிக்காய். ஆகையால், இதை ரசாயனம் என்று சொன்னால் மிகையாகாது.

இந்தியப் பெண்மணிகள் நெல்லிக்காயை ஆரோக்கியத்தின் சௌபாக்கியம் என்றும் ரத்தத்தைப் பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளது.
இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு வாயுவையும், துவர்ப்பு கைப்பும் கபத்தையும் போக்கக் கூடியவை. வாத-பித்த-கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால், இது மிகவும் சிறந்தது. ஆயுர்வேத வைத்தியத்தில் இது மிகவும் பயன்படுகிறது. இதில் ஏ,பி,ஸி ஆகிய 3 வைட்டமின்றகள் இருக்கின்றன. சாத்துக்குடி ரசத்தில் இருப்பதைப்போல 20 மடங்கு இ வைட்டமின் இதில் இருக்கிறது. மற்றக் காய்கனிகளைப் போல் இல்லாமல், நெல்லிக்காய் வாடினாலும் வைட்டமின் குன்றுவதில்லை இது, இதன் தனிப்பட்ட குணமாகும்.

ஆரோக்கியமாகவும் நோயற்றும் வாழ்வதற்கு, ஒவ்வொரு மனிதனுக்கும் தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் தேவை. இதற்கு 4 அவுன்ஸ் சாத்துக்குடி பழரசமோ 8 அவுன்ஸ் தக்காளி பழரசமோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் ய வைட்டமினும் 1/2 அவுன்ஸ் நெல்லிக்காய் ரசத்தில் கிடைக்கிறது. மேலும் இது சாத்துக்குடி, தக்காளி பழங்களைக்காட்டிலும் மலிவானதும்கூட. உலர்ந்த நெல்லிமுள்ளியைவிடப் பச்சை நெல்லிக்காயை உபயோகிப்பது மிகவும் நல்லது.

சில சமயம் சரீரத்தில் ஏற்படும் காயங்கள் ஆறாமல் நாளடைவில் அழுகிப்புழுத்துவிடும். அப்பொழுது நெல்லிக்காயை அரைத்து உருண்டையாக உருட்டி உலரவைத்து, அந்த மாத்திரையைச் சாப்பிட்டால் நன்றாகக் குணமாகிவிடும். இது புழுபூச்சிகளை நீக்கி அழுகுவதைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது.

பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதியைத் தடுப்பது. நெல்லிக்காயை உட்கொண்டால் இந்த வியாதிகள் சீக்கிரம் குணமாகிவிடும். குழந்தைகளுக்குக் கோணலாக முறைத்த பற்களுக்கும் காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் மிகச் சிறந்தது.

கர்ப்பிணிகள் முதலிலிருந்து 9 மாதம் வரையில் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு நெல்லிக்காய் அல்லது அந்த அளவு நெல்லி முள்ளி உட்கொண்டால், அந்தச் சமயத்தில் ஏற்படும் வாந்தி நின்று நன்றாகப் பசி எடுக்கும். நெல்லிக்காய் சாப்பிடுவதனால் இரும்பும் சுண்ணாம்பும் சரீரத்துக்குச் சேர்ந்து கர்ப்பிணிகள் ஆரோக்கியமுள்ளவர்களாகிறார்கள். ரத்த விருத்தியும் ஏற்படுகிறது. தவிர, கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கும் நல்ல புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.

ஒரு பெரிய நெல்லிக்காய் முட்டையைவிட அதிக சக்தி கொடுக்கும் தன்மை வாய்ந்தது. இவ்வாறே குழந்தைகளின் ஆகாரத்திலும் நெல்லிக்காயைச் சேர்த்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அநேக விதமான நோய்கள் கிட்டவே அண்ட மாட்டா. சரீரத்தின் ஒவ்வோர் அங்கம் மலர்ச்சி அடைகிறது. ஆகையால் குழந்தை ஆயுள் முழுவதும் பலசாலியாகவும் இருக்கிறான்.

மாணவர்களுக்கு நெல்லிக்காய் மிகவும் முக்கியமானது. அவர்கள் ஞாபக சக்தியை அதிகரித்துக் கண் பார்வையையும் நன்றாகத் தெளிவாக்குகிறது. சரீரத்தை நெல்லிக்காய் ஆரோக்கியமுள்ளதாக்குவதுடன் புத்திக்கூர்மையையும் ஏற்படுத்துகிறது.

நெல்லிக்காய் மட்டுமின்றி, அந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் மனித சமூகத்துக்கு உபயோகம் உள்ளது. இதன் மரப்பட்டை வீடு கட்டவும். கலப்பை முதலிய உழவு யந்திரங்கள், துப்பாக்கி முதலியவற்றுக்கும் உபயோகப்படுகிறது. இந்த மரத்தில் கிடைக்கும் டானின் ஆஸிட் என்னும் பொருள் இந்தியா முழுவதிலும் தோல் பதனிட உபயோகப்படுகிறது. இலைகளில் கிடைக்கும் வெளுத்த நீலநிறச் சாயம் பட்டுத் துணிகளில் நன்றாகப் படியும்.

நெல்லிமரம் இமய மலையின் அடிவாரத்திலும், ஜம்முவிலிருந்து கிழக்கேயுள்ள பள்ளத்தாக்கிலும் தென்னிந்தியாவிலும் இலங்கையின் காடுகளிலும் அதிகமாக இருக்கிறது. வெயில், பனியில் இபுது வாடிவதங்காது, விலங்கு, பட்சிகளாலும் இதற்கு ஆபத்து ஏற்படாது. இந்த மரம் நிதான உயரமாகவும், எக்காலமும் பசுமையாகவும் உள்ளது. ஆகையால்தான் இதைத் தோட்டங்களில் வைத்தப் பயிரிடுகிறார்கள்.

மழைக்காலத்தில்தான் நெல்லிக்கனியை நடவேண்டும். இது மிகவும் நிதானமாக வளர்வதால், காய்க்க 8 அல்லது 10 வருடங்கள் ஆகும். முற்ற முற்றக் காய்களும் அதிகரிக்கும். நெலலிக்காயின் தோல் 1/3 அங்குலத்துக்கும் மெல்லியது. இதன் இலை புளிய இலை வடிவத்தில் சுமார் அரை அங்குலம் வரை நீளமுள்ளது. இலை அதிகமாக உதிராது. எப்பொழுதும் மரத்தை பசுமையாகவே வைத்திருக்கும். இதன் பூ சிறியதாகவும் பச்சை கலந்த மஞ்சள் நிறமாகவும் உள்ளது. இதன் பூ இலைகளின் நடுவில் கொத்துக் கொத்தாகப் பூக்கும். இந்தப் பூக்களின் நடுவில்தான் காய்கள் ஆகஸ்ட் மாதக் கடைசியில் கொத்துக் கொத்தாகக் காய்க்க ஆரம்பிக்கும்.

நெல்லிக்காயின் எடை, அந்த மரத்தின் ஜாதியைப் பொருத்து 1/2 முதல் 2 அவுன்ஸ்வரை உளளது. உருவத்தில் பாதிப் பாக்கு அளவிலிருந்து ஒரு சிறிய ஆப்பிள் வரை உள்ளது. இதன் கதுப்பில் கெட்டியாக நார் உள்ளது. இது ஆறு பக்கங்கள் கொண்ட கொட்டையைக் கெட்டியாக மூடியிருக்கும். காய் நன்றாக உலர்ந்து போனால், கொட்டையிலிருந்து கதுப்புப் பிரிந்து விடும். நெல்லிக்காய் பச்சை-மஞ்சள் நிறமுள்ளது. நன்றாகப் பழுத்ததும் ரோஜா நிறமாகிறது. வட இந்தியாவில் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலும், தென்னிந்தியாவில் வருடம் முழுவதும் விளைகிறது.

விந்தணு வீரியத்துக்கு நெல்லிக்கனி!

விந்தணு வீரியத்துக்கு நெல்லிக்கனிவைட்டமின் `சி’ நிறைந்தது, நெல்லிக்கனி. அதன் அற்புதமான மருத்துவக்குணங்களைப் பார்ப்போம்…* உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. பற்களுக்கு உறுதியைத் தருகின்றன. கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.
* சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

* சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.

* பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.

* விந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொடுக்கிறது. பெண் இனப்பெருக்க உறுப்பிற்கு பாதுகாப்பையும், உறுதியையும் தருகிறது.

* சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளை�ம் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

* தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக்
கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

* தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூ�டுகிறது. எப்போதும் இளமை�டன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லை களைப்போக்குகிறது. இந்திய� பெ�கள் பொதுவாக நெல்லிக்கனி அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.

* காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற
கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.

* ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

* உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஏழைகளின் ஆப்பிள்!

மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நரை, திரை, மூப்பு, மரணம் இவற்றைத் தள்ளிப்போட்டு நீண்ட காம் ஆரோக்கியமாக வாழும் வழி என்ன? என்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம்.

தமிழ்நாட்டுச் சித்தர்கள் சுருக்கமாக இந்த ஆராய்ச்சியை காயகல்ப ஆராய்ச்சி என்றனர். காயம் என்றால் உடம்பு; கல்பம் என்றால் உடம்பைக் கல் போன்று இறுக வைத்து நீண்ட காலம் வாழவைத்தல். ஆக, காயகல்பம் என்றால் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்று அர்த்தம்.

இந்த காயகல்ப ஆராய்ச்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டவர்கள் நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே குமரிகண்டத்தில் வாழ்ந்த அறிவர் என்ற சித்தர்கள் (சித் என்றால் அறிவு: சித்தர் என்றால் அறிவர்) 108 வகையான காயகல்ப மூலிகைகளைச் சாப்பிட்டு காயசித்தி அடைந்து நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்தனராம்.

அத்தகைய 108 காயகல்ப மூலிகைகளும் ஒன்றுதான் கருநெல்லிக்கனி. இந்தக் கருநெல்லிக்கனியைத்தான் கொல்லிமலையை ஆண்ட அதியமான், அவ்வையாருக்குப் பரிசாக அளித்து நீண்டகாலம் தமிழ்ப்பணி ஆற்றுமாறு வேண்டினார்.

நெல்லிக்கனி மூன்று வகைப்படும். ஒன்று கருநெல்லிக்கனி. இரண்டு மலைநெல்லி எனப்படும் பெருநெல்லி. மூன்று அருநெல்லி. இதில் அருநெல்லி என்பது ஊறுகாய் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் உண்பதாகும். நெருநெல்லி எனும் மலைநெல்லியைத்தான் ஏழைகளின் ஆப்பிளள் என்று குறிப்பிட்டேன்.
செழிப்பான கறுப்பான தலைமுடியை வளர்த்துக் காப்பதிலிருந்து மூளை, கண், காது, மூக்கு, தோல், பற்கள், ஈறுகள், தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், இதயம், இதயநாளங்கள். கல்லீரல், கணையம், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், கருப்பை, சிறுநீரகம், மூட்டுக்கள், பாதங்கள் வரை அனைத்து உறுப்புகளின் திசுக்களையும் வளர்த்து அவை சீராகச் செயல்படத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் கொண்டுள்ள ஒரே கனி, நெல்லிக்கனி.

நெல்லியால் நெடும்பகை போகும் என்பது அருமையான பழமொழி ஆகும். நெடும்பகை என்பது உடல் நோய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மார்க்கெட்டுக்கு வரும் நெல்லிக்கனிகளில் (பெருநெல்லி என்று குறிப்பிடுவர். அருநெல்லி என்பது சிறிய நெல்லி. இதனை மருத்துவத்துக்குப் பயன்படுத்தக்கூடாது)

5 லிட்டர் நெல்லிக்கனிகளை வாங்கி அடிபட்டது, அழுகியது, சொத்தை, கரும்புள்ளி உள்ளவற்றை நீக்கிவிட்டு வெந்நீரில் கழுவி நிழலில் உலர்த்தியபின் நீளமான, சுத்தமான பாயில் இவற்றை உலர விடவும். சூரிய ஒளியின் அனல் மட்டும் பட்டால் போதும். பகல் நேர வெயிலில் 10 முதல் 20 நாள் உலர்த்தவும்.

அளவு மெல்ல மெல்லச் சுருங்கி வற்றல் போல் ஆகிவிடும். அதன் பின் உடைத்து உள்ளிருக்கும் விதைகளை நீக்கி, வற்றல்களை மட்டும் சேகரித்துப் பொடி செய்து 1 கிலோவிற்கு 100 கிராம் மிளகு சேர்த்து பத்திரப்படுத்தவும்.

இதனை ஆண்டு முழுவதும் தினசரி அரை ஸ்பூன் (பெரியவர்களுக்கு) கால் ஸ்பூன் (சிறியவர்களுக்கு) காலையில் தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இப்படிச் சாப்பிட்ட பின் 1 மணிநேரத்திற்குத் தண்ணீர் தவிர வேறெதுவும் சாப்பிட வேண்டாம்.

நெல்லிப் பொடியை இப்படிச் சாப்பிட்டு வருபவர்களுக்கு வளமான தலைமுடி; துல்லியமான பார்வை; வழவழப்பான சருமம், கல்போன்ற இறுகிய தசைநார்கள்; படபடப்பற்ற இதயம்; சுறுசுறுப்பான மூளை; சளியற்ற நுரையீரல்; விறுவிறுப்பான நடை கல்லையும் கரைக்கும் கல்லீரல்; வலியற்ற மூட்டுக்கள்; அயராது உழைக்கும் கரங்கள் ஆகியவற்றுடன் சுருங்கக் கூறின் வளமான உடல் நலம் பெறலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக 50ல் முதுமை என்ற நிலையைக் குறைந்தபட்சம் 60ல் முதுமை என்ற அளவிற்குத் தள்ளிப் போடலாம்.

நெல்லிக்கனி என்பது “நல்வாழ்வுக்கனி’ என்ற உண்மை. அனுபவத்திலும் அறிவியலிலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உறுதியாகியுள்ளது. இதுவே உன்னத காயகல்பம்! இதனைத் தினசரி உண்பவர்கள், கடைகளில் காயகல்ப மருந்து தேடி அலைய வேண்டாம்!

”An apple per day, keeps the doctor away” என்பது ஆங்கிலப் பழமொழி. “தினம் ஒரு நெல்லிக்கனி, தீர்க்காயுளை அள்ளித்தரும்’ என்பது அனுபவமொழி ஆகும்.
————————————————————————————————
நெகிழவைக்கும் நெல்லிக்காயின் பயன்? (Gooseberry)
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். இதைவிட நெல்லிக்காய் சாப்பிடுங்க அப்படின்னு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேறெதாவது காரணம் தேவைப்படுமா? இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால், மற்ற இயற்கை உணவுகளைப்போல் இல்லாமல் நெல்லிக்காயை சமைத்து உண்டாலும் அதனுடைய சத்து சமைப்பதனால் குறைவதே கிடையாது.

கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. மனிதனுடைய ஈரல் இந்த கொழுப்புச் சத்திற்கு அடிப்படையாக அமைவது. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் ‘சி’ இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்துவிடும். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

நெல்லிப்பொடி + சர்க்கரைத் தூள் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரில் கரைத்துப் பருகி வர, உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள் நெல்லிப்பொடி + சர்க்கரை + பாகற்காய் பொடி 2 அல்லது 3 முறை ஒரு நாளைக்கு சாப்பிட்டு வர முன்னேற்றம் தெரியும்.

அசிடிடி உள்ளவர்களுக்கும் நெல்லி ஒரு சிறந்த நிவாரணி. ஏன் முடி வெள்ளையாக மாறி வருகிறது என்று கவலைப்படுபவர்கள், நெல்லிப்பொடியை ஒரு இரும்புக் கின்னத்தில் போட்டு தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்தால் ஷாம்பு + கண்டிஷனர் + ஹேர்டை தயார்!
———————————————————————————————–
நெல்லிக்கனியின் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறுவதில் நான் “கொள்கை பரப்புச் செயலாளரா’கவே மாறி விட்டேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நான் நெல்லிக்காய் சாப்பிட்டு வருகிறேன். நல்லது என்ற ஒரே காரணத்தால்; மருத்துவ பலன்களை முழுவதும் அறியாமல்!

அலர்ஜி தொல்லையால் எனக்கு மூச்சிரைப்பு, அடிக்கடி பலவீனமாதல் என்று சின்ன, சின்ன தொல்லைகள் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். இதுவெல்லாம் உங்கள் கட்டுரையைப் படித்த அனைவருக்கும் தெரியும். இது போக, பெண்ணானதால் என்னால் “ஓப்பனாகச்’ சொல்ல முடியாத பலன் ஒன்றும் இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ள அனைவரும் கட்டாயம் ஏதேனும் ஒரு வழியில் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது மிக, மிக நல்லது – குறிப்பாக ஆண்கள்!

நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து (இரண்டு நெல்லிக்காய்) இருவர் சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், இனிப்பு சேர்க்காமல் சாப்பிடலாம் அல்லது நீராவியில் வேக வைத்து, மிகவும் பொடியாக நறுக்கி, நாட்டுச் சர்க்கரையில் சுக்கு, ஏலம் சேர்த்து நன்கு கிளறி, சுருள பதம் வந்தவுடன் இறக்கி, பிரிட்ஜில் ஆறு மாதம் வரை வைத்திருந்தாலும் கெட்டுப் போகாது. தினமும் ஒன்று அல்லது இரண்டு மேஜைக்கரண்டி அளவு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.

நான் இதை இத்தனை அக்கறையோடு சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், நம் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் ஹீமோகுளோபின் 10 மி.கி.,க்கும் குறைவு. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில் 3-4 மி.கி., வரை கூடுவது கண் கூடாக நான் கண்ட உண்மை!
மருத்துவமனையில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் உயிருக்குப் போராடி, எமனை பார்த்து விட்டுத் திரும்பி வந்தான் என்றே கூறலாம். வரும்போது ஹீமோகுளோபின் 6 மி.கி., தான். வழக்கம்போல் மருந்து, மாத்திரைகள் மூலம் ஹீமோகுளோபினைக் கூட்ட மிகவும் முயற்சி செய்தனர். பார்க்க வந்தவர்கள் எல்லாம் ஆர்லிக்ஸ், பழங்கள் கொண்டு வர, நான் மட்டும் நெல்லிக்காய் ஜாம் கொண்டு சென்றேன்; மகிமையையும் கூறினேன்.

பதினைந்து நாட்கள் கழித்து தொலைபேசியில் என்னை அழைத்து நன்றி கூறி, “இன்னும் நெல்லிக்காய் ஜாம் செய்து தர முடியுமா? கணிசமான முன்னேற்றம் என் மகனின் உடல்நிலையில்…’ என்று கூறினார் நண்பர். ஒரு மாதத்தில் ஹீமோகுளோபின் 11 மி.கி., ஆக கூடி விட்டது. குடும்பமே எனக்கு நன்றி தெரிவித்தது.

அமிர்தத்திற்கும் மேலானது நெல்லிக்கனி என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.
சர்க்கரை வியாதி உள்ள ஆண்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால், “இல்வாழ்க்கை’ மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்பது தான் இக்கடிதத்தின் மிகவும் முக்கியக் குறிப்பு!
-சர்க்கரை நோயுள்ள ஆண்களின் தாம்பத்திய வாழ்வில் மீண்டும் உற்சாகத்தை அளிக்கவல்லது நெல்லிக்காய் என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டார் அந்த வாசகி.
***************************************************************************************
மிகவும் பழமையானதும் புராணங்கள் இலக்கியங்கள் போன்றவற்றில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுமான சிறந்த கனி நெல்லிக்கனி.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், கை மருத்துவம், யுனானி போன்ற அனைத்து வகையான மருத்துவ முறைகளிலும் பிரதான இடம் வகிப்பது இந்த நெல்லிக்கனியாகும். சத்துக்களிலும் சரி, நோய் தீர்க்கும் குணங்களிலும் சரி நெல்லியை மிஞ்ச வேறேதும் இல்லை. முற்காலத்தவர்கள் நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி உண்டு உடலையும், மனத்தையும் என்றும் இளமையாக வைத்திருந்தார்களாம். எனவேதான், இதைக் ‘காயகல்பம்’ என்று அழைத்தனர். இன்று இதன் பெருமை உணர்ந்து உலக மக்களனைவரும் பல்வேறு வகையில் நெல்லியைப் பயன்படுத்துகின்றனர்.
இது தென்னிந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் தென்மேற்கு ஆசியப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டதாகும். நெல்லியில் இருவகை உண்டு. அரிநெல்லி மற்றும் பெருநெல்லி என்பனவாகும். அரிநெல்லி சிறிதாக வளரும். வீடுகளில் காணப்படும். பெருநெல்லி பெரிய மரமாக வளரும். சிறிய இலைகளைக் கொண்டதாகும்.

பல்வேறு பயன்கள்

நெல்லிக்கனியைப் பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம். நெல்லிச்சாறு, சர்பத், நெல்லிபர்பி, நெல்லிமுரப்பா, உலர்நெல்லி, நெல்லிப்பொடி, லேகியம், விதைப்பொடி, நெல்லித்தைலம், நெல்லிநீர், திரிபலா, ஊறுகாய் போன்று பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்.

பல்வேறு மொழிப்பெயர்கள்

ஆங்கிலம் – கூஸ்பெர்ரி
சமஸ்கிருதம் – அம்ரபாலம் அமலாகம்
குஜராத் – அம்லா
அஸ்ஸாம் – அம்லிக்
மராத்தி -அவ்ளா
கன்னடம் – நெல்லிக்காயி
பிரஞ்ச் – பிலாந்தா எம்ப்லிக
ஜெர்மன் -கெப்ரசலிசெர்
வங்காளம் – அம்லாகி
இந்தி – அம்லா, ஆரா
காஷ்மீர் – அன்போ
பஞ்சாப் – அம்பலி
தெலுங்கு – உளிரிக்காய்
மலையாளம் – நெல்லிக்க
பெர்ஸியன் – அமலா
அரபு – அம்லாஜ்

இதன் தாவரவியல் பெயர் ‘எம்ப்லிகா அஃபிஸினாலிஸ்’ என்பதாகும். இது யூபோர்பியேசியே என்ற தாவரக் குடும்பத்தின்கீழ் வருகிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்

ஈரப்பதம் – 81.2%
புரதம் -0.5%
கொழுப்பு – 0.1%
தாது உப்புக்கள் – 0.7%
நார்ச்சத்து – 3.4%
மாவுச்சத்து -14.0%
சுண்ணாம்பு – 0.05%
பாஸ்பரஸ்- 0.02%
இரும்பு – 1.2%
வைட்டமின் ‘பி’ – 30 மி.கி
நிகோடினிக் அமிலம் – 0.2 மி.கி
வைட்டமின் ‘சி’ – 600 மி.கி

மற்ற பழங்களை விட நெல்லிக்கனியில் தான் அதிகளவு வைட்டமின் ‘சி’ உள்ளது. நெல்லியை வேகவைத்தாலோ, ஊறுகாய் போட்டாலோ, உலர வைத்தாலோ இதிலுள்ள வைட்டமின் ‘சி’ அழிவதில்லை. மேலும் கூந்தல் தைலங்கள் தயாரிக்கலாம். நெல்லிக்கட்டையைக் கிணற்றில் போட்டால் நீரிலுள்ள உப்புக்களை நீக்கி தண்ணீரைச் சுத்திகரிக்கும்.

மருத்துவப் பண்புகள்

குளிரூட்டி, மலமிளக்கி, விஷம்போக்கி போன்ற தன்மைகளைக் கொண்டது. மேலும் நுரையீரல் பெருக்கத்தைக் குணப்படுத்தும். புழுக்களைக் கொல்லும். கண்நோய், வயிற்று நோய்களைக் குணப்படுத்தும். இராஜ மருந்து எனப்படும் ‘திரிபலா’ மருந்துக் கலவையில் நெல்லி முதன்மையாக இதில் இடம்பெறுகிறது. இடம்பெறும் மற்ற இரண்டு மருந்துகள் கடுக்காய், தான்றிக்காயாகும். நெல்லிப் பழங்களைக் கொண்டு ‘ச்யவனப்பிராசம்’ மருந்து தயாரிக்கப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும்.

உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.

நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும்.

நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.

நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும்.

நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.

பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.

நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.

உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.

நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.

நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.

நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும்.

நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.

பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.

நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.

நெல்லிச்சாறில் சந்தனம் உரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.

நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.

நெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும்.

நெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும்.

நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும்.


ஆமலகம் என்று கூறப்படும் நெல்லியின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். கருநெல்லி (கிடைப்பது அரிது), அருநெல்லி (எளிதில் கிடைக்கும்) என இரு வகைப்படும். நெல்லிக்காய் பசுமை நிறமாகவும், நெல்லிப்பழம் வெண்மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நெல்லிப்பழம் உலர்ந்த பின்னர் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லிமுள்ளி என்று பெயர். இதனை நெல்லி வற்றல் என்றும் அழைப்பர். நெல்லி முச்சுவை உடையது; முதல் சுவை புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். நெல்லியை சுவைத்த பின்னர் தண்ணீர் அருந்தியவுடன், இனிப்புச் சுவையான நீர்போல் சுவைப்பதன் காரணம் இதுதான்.* நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

* நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

* நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

* நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

* நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

* நெல்லிவற்றலை தண்ணீ ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

* நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

* நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

* நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

* நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து…. சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.

* நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.

உள்ளங்கை நெல்லிக்கனி

அதற்கு நாம் சொல்லும் பொருள், உள்ளங்கையில்வைத்தால் அது பளிச்சென்று தெரியும்.
உள்ளங்கையில் ஆரஞ்சு வைத்தால்கூட, அது பளிச்சென்று தெரியும், பிறகு ஏன் நாம் ‘உள்ளங்கையில் ஆரஞ்சுக் கனிபோல’ என்று சொல்வதில்லை?

அதற்குக் காரணமே வேறு, மற்ற பழங்கள் உள்ளிருந்து அழுகும், நெல்லிக்கனிமட்டும் வெளியிலிருந்து அழுகும்.

ஆகவே, மற்ற பழங்களைக் கையில் வைத்துப் பார்த்தால், அது நல்லதா அழுகியதா என்று தெரியாது, நெல்லிக்கனியைப் பார்த்தால்மட்டும் உடனே தெரியும். அதனால்தான் உள்ளங்கை நெல்லிக்கனியைப் பயன்படுத்துகிறோம்.


முதலில் அச்சான திருக்குறள்

கி பி 1812 இல் முதன் முதலில் அச்சான திருக்குறள் - மூலபாட முகப்பும் கடவுள் வாழ்த்துப் பகுதியும்.

மர அச்செழுத்துக்களால் பதிக்கப்பட்ட இத்திருக்குறள் நூல் தான் முதன் முதலில் சுவடியிலிருந்து அச்சேறிய பண்டைத்தமிழ் இலக்கியமாகும்.

இதனுடன் நாலடியாரும் சேர்த்தே பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
திருக்குறள் எழுதிய வண்ணம் :

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் தன் குறளை எப்படி எழுதியிருப்பார் என்று கற்பனை செய்து பார்த்ததுண்டா?
படத்தைக் காணுங்கள். தலை சுற்றுகிறதா?
காலந்தோறும் வளர்ந்த தமிழ் எழுத்தின் வரிவடிவை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் காலத்திய கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறளைத் தந்துள்ளனர் ,
சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் திருவாளர்கள் கிப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜன், எம். சந்திரசேகரன் ஆகியோர்.

தென்னாட்டுக் குகைக் கல்வெட்டு எழுத்துக்களான "தமிழ் பிராமி" எனும் தமிழ் எழுத்து காலத்தில் நம்முடைய தமிழ் எழுத்து
வடிவமைப்பில் திருக்குறள் எப்படி எழுதப் பெற்றிருக்கும் என்பதைக் காணுங்கள்.
அப்படத்தில் உள்ள குறள் கீழே :-

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்கு மாறு.

ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
உள்ளம் உடைக்கும் படை.

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.

தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலி னாங்கொன்று உடைத்து.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.

ஊடிப் பெருகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்





பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். -பாரதி

பழங்கதைகள் பேசியே அப்படியே இருந்துகொண்டிருக்கிறோம் !
______________________________

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! - அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
______________________________

சித்திரக்கவிகள் :

இந்தப் பாடல் நேராக வரிவடிவிலும், சுழியாகச் சித்திர வடிவிலும் அமைந்துள்ளது.

மேலிருந்து கீழாக முதல் எழுத்துக் களையும் கீழிலிருந்து மேலாகக் கடையெழுத்துக் களையும் சுற்றி சுற்றி நான்கு முறைப் படித்தாலும் சரியாக வரும்.

கவிமுதி யார் பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா

பொருள் :

வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள்
விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும்.
அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி
முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும்
______________________________

பழந்தமிழர் கட்டிடக்கலை

• சிறு குடியிருப்புகள் வடிவமைத்தல்
• கிராமங்கள் அமைத்தல் ( 12 வகை )
• நகரத்தை திட்டமிடல் மற்றும் வடிவமைத்தல் ( 7 வகை )
• பெரு நகரங்கள் வடிவமைத்தல் (20 வகை )
• கோட்டை வடிவமைத்தல் (12 வகைகள் )
• கோவில்கள்
• அரண்மனை (அ) அரச மாளிகை வடிவமைத்தல்
• அரண்மனை முகப்பு அமைத்தல் (அதாவது படைகள் அணிவகுத்து நிற்க மற்றும் அரச விழாக்கள் கொண்டாட )
• பிற வகை மாளிகைகள்
• அரியணை ,அரசகட்டில், சிம்மாசனம் வடிவமைத்தல்
• நீதி மற்றும் ஆட்சிநிர்வாக மன்றங்களை அமைத்தல்
• கருவூலமனை ( அ ) பண்டாரம் களம் அமைத்தல் ( அரண்மனைக்குள்ளும் வெளியிலும் )
• படைக்கலசாலை ( அ ) படைக்கொட்டில் அமைத்தல்
• பல்கலைகழகம் (சர்வகலா சாலை) மற்றும் கல்லூரி அமைத்தல்
• ஏடகம் ( காகிதம் வருவதற்கு முன்னர் ) அதாவது நூல் நிலையம் அமைத்தல்
• பெரு விருந்து மாளிகைகள்,
• மன நிறைவு கொடுக்கத்தக்க புகலிடங்கள் அமைத்தல் ( இளவேனில் வசந்த காலத்தில் பயன் படுத்த )
• வாயில்கள் ( 12 வகை)
• நகர மற்றும் பிற அலங்கார வளைவுகள் ( 3 வகை )
• கோபுரங்கள் அமைத்தல்
• சிறப்பு பயன் மன்றங்கள் ( சங்கம் )
• இளவரசர் மற்றும் அமைச்சர்கள் மாளிகைகள் அமைத்தல்
• தனி வீடுகள்
• பல தளங்கள் கொண்ட மன்றங்கள்
• நாடக மற்றும் இசைச்சாலை அமைத்தல்
• விளக்கு தூண்கள்
• கூரை வேய்தல்
• தனிய களஞ்சியம்
• சாலைகள் அமைத்தல் ( ராஜா வீதி முதலானவை )
• ஓய்விடங்கள்,ஆயுதம் தாங்கிய காவலர்கள் அரண் மற்றும் போர்க்கால புறக்காவல் அரண்கள் அமைத்தல்
• அழகு மாளிகைகள்
• தெய்வ படிமங்கள்
• தேர்கள் வடிவமைத்தல்
• சிறு குளங்கள் அமைத்தல்
• பெரிய நீர் நிலைகள் ( தடாகம் ) அமைத்தல்
• செல்ல பிராணிகளுக்கான பூங்காக்கள்
• குதிரைகள் நிறுத்துமிடம்
• யானைகள் நிறுத்துமிடம்
• 100 முதல் 1000 கால்கள் உடைய மண்டபங்கள் அமைத்தல்.
______________________________

ஊக்கமது கைவிடல்

ஊக்கம் என்து எதையும் வெற்றிகரமாக முடிப்பேன் எனும் உறுதிகொள்ள கூடியதுமான தன்னம்பிக்கையாகும். ஒரு மனிதன் வாழ்வில் எத்தனை செல்வத்தை இழந்தாலும் பலவிதமான இழப்புகளை சந்திக்க நேர்ந்தாலும் அவன் தன்பால் உள்ள ஊக்கம் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது. அவனது ஊக்கத்தை இழந்தால் அவனிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அனைத்து செல்வங்களையும் இழந்தது போல ஆகும்.
ஒருவன் மனஉறுதியோடு தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தாங்கிக்கொண்டு மற்றவர் முன்னிலையில் சோர்வைக் காட்டாது இருக்க வேண்டும். எவராக இருந்தாலும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டு அஞ்சாது ஊக்கத்துடன் எதிர்த்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

முதுபெரும் ஞானியான திருவள்ளுவர் தமது திருக்குறளில் ஊக்கம் உடைமை அதிகாரத்தில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

உடையார் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று.

ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்;மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும். உயர்வு நடக்காவிட்டாலும் எண்ணத்தை கைவிடக்கூடாது.

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம்
பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை
கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால்,
கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும்
அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.
வெறுமனே கையால் கொடுத்தால்,
கொடுப்பவர்கை மேலும்
வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும்
தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர்
நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

தமிழின் சொல்வளம்

1. அசைத்தல் : அசை பிரித்துச் சொல்லுதல்.
2. அறைதல் : உரக்கச்சொல்லுதல்.
3. இசைத்தல் : கோவைபடச் சொல்லுதல்
4. இயம்புதல் : இயவொலியுடன் (இசையோடு) சொல்லுதல்.
5. உரைத்தல் : செய்யுட்கு உரை சொல்லுதல்.
6. உளறுதல் : அச்சத்தினால் ஒன்றிற்கின்னொன்றைச் சொல்லுதல்.
7. என்னுதல் : ஒரு செய்தியைச் சொல்லுதல்.
8. ஓதுதல் : காதில் மெல்லச் சொல்லுதல்.
9. கரைதல் : அழுது சொல்லுதல்.
10. கழறுதல் : கடிந்து சொல்லுதல்.
11. கிளத்தல் : ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.
12. குயிற்றுதல் : கியிற் குரலுல் சொல்லுதல்.
13. குழறுதல் : நாத் தடுமாறிச் சொல்லுதல்.
14. கூறுதல் : கூறுபடுத்துச் சொல்லுதல்.
15. கொஞ்சுதல் : செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.
16. சாற்றுதல் : அரசன் ஆணையைக் குடிகளுக்கு அறிவித்தல்.
17. செப்புதல் : வினாவிற்கு விடை சொல்லுதல்.
18. சொல்லுதல் : இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்.
19. நவிலுதல் : பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்.
20. நுதலுதல் : ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
21. நுவலுதல் : நூலைக் கற்பித்தல்.
22. நொடித்தல் : கதை சொல்லுதல்.
23. பகர்தல் : பகிர்ந்து விலை கூறுதல்.
24. பலுக்குதல் : உச்சரித்தல்.
25. பறைதல் : ஒன்றைத் தெரிவித்தல்.
26. பன்னுதல் : நுட்பமாய் விரித்துச் சொல்லுதல்.
27. பிதற்றுதல் : பித்தனைப் போலப் பேசுதல்.
28. புகலுதல் : ஒன்றை விரும்பிச் சொல்லுதல்.
29. புலம்புதல் : தனிமையாய்ப் பேசுதல்.
30. பேசுதல் : உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல்.
31. மாறுதல் : மாறிச் சொல்லுதல்.
32. மிழற்றுதல் : கிளிக்குரலில் சொல்லுதல்.
33. மொழிதல் : சொல் திருத்தமாகப் பேசுதல்.
34. வலத்தல் : கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.
35. வலித்தல் : வற்புறுத்திச் சொல்லுதல்.
36. விடுதல் : மெல்ல வெளியிடுதல்.
37. விதத்தல் : சிறப்பாய் எடுத்துச்சொல்லுதல்.
38. விள்ளுதல் : வெளிவிட்டுச் சொல்லுதல்.
39. விளத்துதல் : விரித்துச் சொல்லுதல்.
40. விளம்புதல் : பலர்க்கு அறிவித்தல்.
41. நொடுத்தல் : விலை கூறுதல்.
42. பாராட்டல் : போற்றி உரைத்தல்.
43. பொழிதல் : இடைவிடாது சொல்லுதல்.
44. பனுவுதல் : செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்.
45. கத்துதல் : குரலெழுப்பிச் சொல்லுதல்.


தமிழ் இயற்கை மொழி என்றும் முதல் தாய் மொழி என்றும்
உலக முதன் மொழி என்றும் மொழியியல் அறிஞர்களால் பாராட்டப் படுகின்றது.
இப்படிப்பட தகுதிகள் கொண்டதாகத் தமிழ் இருப்பதால்தான் தமிழ் சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது .


அகதி - ஏதிலி
அக்கினி நட்சத்திரம் - எரிநாள்
அங்கவஸ்திரம் - மேலாடை
அங்குலம் - விரலம்
அசரீரி - உருவிலி
அஞ்சலி - கும்பீடு, இறுதி வணக்கம்
அத்தியாவசியம் - இன்றியமையாமை
அதிகாரபூர்வம் - அதிகாரச் சான்று
அதிசய மனிதர் - இறும்பூதாளர்
அதிர்ஷ்டம் - ஆகூழ்
அத்வைதம் – இரண்டன்மை
அநேக – பல
அநேகமாக - பெரும்பாலும்
அந்தரங்கம் - மருமம், கமுக்கம், மறைமுகம்
அந்தஸ்து - தகுதி
அபயம் - ஏதம், கேடு
அபராதம் - தண்டம்
அபாயம் - இடர்
அபிப்ராயம் - கருத்து, ஏடல்
அபிமானம் – நல்லெண்ணம்
அபிவிருத்தி – மிகுவளர்ச்சி
அபிஷேகம் – திருமுழுக்கு
அபூர்வம் – அருமை
அப்பியாசம் - பயிற்சி
அமரர் - நினைவில் உரை, காலஞ் சென்ற
அமாவாசை - காருவா
அமோகம் - மிகுதி
அரபிக்கடல் - குட கடல்
அராஜகம் - அரசின்மை
அர்ச்சகர் - வழிபாட்டாசான்
அர்த்தம் - பொருள்
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசகுனம் - தீக்குறி
அவசியம் – வேண்டியது, தேவை
அவதாரம் – தோற்றரவு
அவயவம் - உடலுறுப்பு
அற்புதம் - இறும்பூது, நேர்த்தியான
அனுபல்லவி . துணைப் பல்லவி
அனுபவம் - பட்டறிவு
அனுபவித்தல் - நுகர்தல்
அனுமானம் – உய்த்துணர்வு
அனுஷ்டி – கடைபிடி, கைக்கொள்
அன்னாசி – செந்தாழை
அன்னியம் – அயல்
அஸ்திவாரம் - அடிப்படை

Saturday 10 May 2014

தமிழின் அடைமொழிகள்:


1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் =அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ்,தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் அன்னையாக விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க,உரைக்க, சிந்திக்க,செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு,கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல்,போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ் 13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல,அடர்ந்து செறிந்த நிலையிலும் கற்க கற்க மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை,பொருட்சுவை, கலைச்சுவை,கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது(செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்:- தன்னிகரில்லாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் தாயாக மூலமாக விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்)இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய,எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று –நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்:- மா – பெரிய –பெருமைமிக்க தமிழ் (மங்கலப்பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

தரவு: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை
______________________________

தமிழ் மாதங்கள்

தமிழ் மாதங்கள்

நடைமுறை - தமிழில்

சித்திரை............... மேழம்
வைகாசி............... விடை
ஆனி.................... ஆடவை
ஆடி..................... கடகம்
ஆவணி................... மடங்கல்
புரட்டாசி................ கன்னி
ஐப்பசி..................... துலாம்
கார்த்திகை............... நளி
மார்கழி................... சிலை
தை ....................... சுறவம்
மாசி....................... கும்பம்
பங்குனி................... மீனம்
______________________________

சிலேடை

சிலேடை என்பது ஒரு சொல்லுக்கு இரு பொருள் காண்பது. இரு பொருள்பட அமையும் சிலேடை, செய்யுளுக்கு அணியைச் சேர்க்கும் சிறப்புடையது.

சிலேடைச் செய்யுள் பாடுவது மிகுந்த புலமையுடையவர்களால் மட்டுமே முடிந்த செயலாகும். தமிழ்ப் புலவர்களில், கவி காளமேகம் சிலேடை பாடுவதில் சிறந்தவராக விளங்கினார்.

இதோ அடியேன் இரசித்த ஒரு : ஐந்து "டு" பாடல்!

ஓகாமா விதோநே ரொக்க டுடுடுடுடு
நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய்
எடுப்பர் நடமிடுவர் ஏறுவர்அன் பர்க்கும்
கொடுப்பர் அணிவர் குழைக்கு.

விளக்கம்:
ஓ கா மா வீ தோ என்னுமிந்த ஐந்து எழுத்துகளும் டுடுடுடுடு
என்கிற இந்த ஐந்து எழுத்துகளுடன் பொருந்துவதால் உண்டாகும் சொற்கள் முறையே ஓடு, காடு, மாடு, வீடு, தோடு.

குடந்தை நகர்த் தலைவனான சிவபெருமான் ஓட்டைக் கையில் கொண்டுள்ளார். காட்டில் நடனமாடுவார், மாட்டின் மேல் ஊர்வார், வீட்டை (முக்தியை)ப் பக்தர்களுக்கு அளிப்பார். தோட்டைக் (காதணியைக்) காதில் அணிவார்.

புரிதல் ஏற்பட்டதா? என்னைப் போல் நீங்களும் இரசித்தீர்களா?
______________________________

செந்தமிழ் நாடெனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

(செந்தமிழ்)


வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

(செந்தமிழ்)


காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு.

(செந்தமிழ்)


முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு.

(செந்தமிழ்)


நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.

(செந்தமிழ்)


கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.

(செந்தமிழ்)


வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.

(செந்தமிழ்)


சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.

(செந்தமிழ்)


விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.

(செந்தமிழ்)


சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
______________________________

மாலை மாற்று

திருஞானசம்பந்தர் அவர்களுடைய தமிழ் ஞானத்தைக் காண்போம் வாருங்கள். இவர் 7-ஆம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். மூன்று வயதிலேயே தமிழ் புலமைப் பெற்றவர் இவர் என்று வரலாற்று ஏடுகள் கூறுகின்றனர். இவரை சமய வாதியாக உலக பார்த்தாலும் (உண்மை எதுவாகினும்) தமிழை வானுயர வளர்த்த சான்றோர்களின் வரிசையில் இவரும் ஒருவர்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

இந்தப் பாடலை முதல் எழுத்திலிருந்து வலப்புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப்புறமாகவோ படித்தால் ஒரேமாதிரி இருக்கும். ஆகையால் இப்பாடல் மாலை மாற்று’ என்ற வகையைச் சேர்ந்தது.

பாடலைப் பிரித்துப் படிக்கும் முறை.

யாம் ஆமா நீ ஆம் ஆம் மா யாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா

நாங்கள் கடவுள்களா?(யாம் ஆமா?) நீ மட்டும்தான் கடவுள், ஆமாம்! (நீ ஆம் ஆம்)

பெரிய யாழை ஏந்தியவனே (மா யாழீ), எல்லோராலும் விரும்பப்படுகிறவனே (காமா) காணும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே (காண் நாகா),

காமனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே (காணா காமா) , சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே (காழீயா)

பெரிய மாயைகளைச் செய்பவனே (மா மாயா) எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று! (நீ மா மாயா)

என்னங்க? இது தமிழ் தானா என்ற சந்தேகம் வந்து, இப்போது தமிழ்தான் என்று நன்கு தெரிந்திருக்குமே? சத்தியமாக தமிழ் தானிது. இப்படி ஒன்று இரண்டு அல்ல, பல பாடல்களைப் பாடியிருக்கிறார் திருஞானசம்பந்தர்.
______________________________


தமிழ்
இனிது..! இனிது..! இனிது..!
அமிழ்து..! அமிழ்து..! அமிழ்து..!
======================

தமிழ்க் கடலில் நம் உள்ளத்தைக் கொண்டு கொஞ்சம் உலர்த்தலாம் வாங்க. கீழே பதிவிடப்பட்ட பாடல்களைக் கண்டு இது தமிழ்தானா என்று கூட நீங்கள் கேட்கலாம். முழுமையும் படித்து பாருங்கள். அதன் பொருளும் சுவையும் தெரியும். போகலாமா?

காளமேகப் புலவர் வியக்கத்தக்க, சிலேடை புலவராய் இருக்கின்றார். 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் ஆசுகவி, மதுரகவி என்று புகழ் பெற்றவர். நினைத்தவுடனேயே எதைப்பற்றியும் பாடக் கூடிய புலமைப் பெற்றவர்ளைத்தான் ஆசுகவி என்பார்கள்.

தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

(கூகை - ஆந்தை)

காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட கையாலாகிவிடக்கூடும் (கைக்கு ஐக்கு ஆகா).

அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு எந்தப் பூவிலுள்ள (எத்தாது) தேன் தித்தித்தது (இனித்தது)?

ருத்ர வீணை

நாதத்திலிருந்தே எல்லாம் வந்தது. ஸப்த ஸவரங்களும் ஸப்த மண்டலங்கள்,ஸப்த ரிஷிகள், ஸப்த தாதுக்களாய் வந்ததாகச் சொல்வார்கள். இந்த பிரபஞ்சத்தில் அசையும், அசையாத எல்லாப் பொருள்களிலும் ஏதோ ஒரு ரீங்காரம் இசையாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.இசை நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுருவிச் சென்று மூளையை அடைந்து உணர்வுகளை மாற்றி விடும் வல்லமை உடையது.

மலையாளத்தில் தெருவ கீதங்கள் என்ற படத்தில் உள்ள இரண்டு ஜேசுதாஸ் பாடல்களை மொட்டை மாடியிலோ, தோட்டத்திலோ அமர்ந்து கொண்டு ஒலிக்கச் செய்தால் காற்றே இல்லாத நேரத்தில் கூட மெல்லிய தென்றல் காற்று வந்து உங்களைத் தழுவுவதை உணர முடியும். அமிர்த வர்ஷினி பாடினால் மழை வரும் என்கிறார்கள். வந்தது, அது ஒரு காலம். இப்போது காற்று மண்டலம் எங்கும் ஒலி, ஒளி அதிர்வுகளும், அலைகளும் குறுக்கிடுவதால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே. செல் போன் டவரில் இருந்து வரும் கதீர் வீச்சுகளால் குருவி முட்டை குஞ்சு பொரிப்பதற்கு முன்பே உடைந்து போய் குருவிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்து விட்டதல்லவா ? அதுபோல எத்தனையோ குறுக்கீடுகள் இசை அலைகளை வெகு தூரம் சென்று இலக்கை அடையவிடாமல் தடுத்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.

இயற்கையின் வடிவான இறைவனை ஆராதிக்கவும், அந்த ஆராதனையின் மூலம் உயிர்களை மகிழ்விக்கவும், அவற்றின் மனதை அமைதிப்படுத்தவும் இசைக் கருவிகள் தோன்றின. ஆதியிலிருந்தே எண்ணற்ற இசைக் கருவிகள் உருவாகியும், இடையில் அழிந்தும் மீண்டும் உயிர் பெற்றும் சிறப்புச் செய்திருக்கின்றன. தோல் வாத்தியங்கள், தந்தி வாத்தியங்கள், காற்று வாத்தியங்கள், உராய்வு வாத்தியங்கள் போன்ற எண்ணற்ற வாத்தியங்கள் இசை உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தாலும், தந்தி வாத்தியங்கள் இவற்றில் தனி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. தந்தி வாத்தியங்கள் அனைத்தும் யாழ் வகையைச் சேர்ந்தவைகளே. 200 தந்திகள் கொண்ட யாழ் கூட இருந்ததாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட அதிசயமான யாழ் வகைகள் ஏதும் இப்போது இல்லை என்பது வேதனையான விஷயம்.


இதில் வீணை என்பது மிகவும் அற்புதமான வாத்தியம். மனித உடலையும் வீணையையும் ஒப்பிட்டு பேசுவார்கள். வீணையின் நடுவே நீளமாக காணப்படும் பகுதி மனிதனின் முதுகுத்தண்டாகவும், குடத்தை தலையாகவும், சிம்ம முகத்தை மூலாதாரமாகவும், தந்திகளை நரம்புகளாகவும், தந்திகளை இழுத்து சரி செய்வதை யோகப் பயிற்சியாகவும் கூறுவார்கள். நன்கு சுருதி சேர்தந்து வைக்கப்பட்டுள்ள வீணை அருகில் ஒலிக்கும் ஒலியை அதிர்வுகளாய் வெளிப்படுத்தும். அது போல யோகப் பயிற்சியில் சிறந்தவர் அருகில் உள்ளவர்களின் உணர்வுகளை உணர்ந்து விடுவார் என்று சொல்வார்கள். வீணையை இசைப்பவரின் பிராண சக்தி அந்த வீணையில் ஓடிக் கொண்டே இருப்பதாகச் சொல்வார்கள். வீணைகளில் எண்ணற்ற வீணைகள் இருந்தாலும், மூன்றுவிதமான வீணைகள் அங்கங்கே வாசிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்திய தேசத்தை பாரம்பரியமாகக் கொண்டவை. ருத்ர வீணை, விசித்திர வீணை, சரஸ்வதி வீணை போன்றவைகளில் தென் இந்தியாவில் சரஸ்வதி வீணையே பெரும்பாலும் வாசிக்கப்படுகிறது.

மந்திர உபாசணைகளால் எத்தனைவிதமான சித்திகளைச் செய்ய முடியுமோ, அத்தனையையும் வீணையை இசைத்து ராக ஆலாபணைகளால் செய்ய முடியும். இதற்கு இராவணனை உதாரணமாகச் சொல்வார்கள்.குதிரை முக தேவர்கள் மூலம் யாழ், நாரதர்கள் வழியாக தும்புறுஎன்கிற தம்புரா, கலைவாணி இசைக்கும் ஸாரஸ்வத வீணா போன்ற இசைக் கருவிகள் எல்லாம் தேவர்களால் மனிதர்களுக்கு அருளப்பட்டது என்ற நம்பிக்கை உண்டு. இறைவனால் வழங்கப்பட்ட 64 தந்திரக்கலைகளில் கந்தர்வ தந்திரம், ருத்ரயாமளம், யக்ஷிணிதந்திரம், வீணா என்ற தந்திரங்கள் யாவும் இசையைப் பற்றியதே. இந்தத் தந்திரங்களை உபாசிப்பவர்களுக்கு இசை ஞானமும், இசைக் கருவியும் இறைவனால் வழங்கப்படும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது.

துருபதம் என்ற பண்டைய இசைப் பாரம்பரியம் 19 ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்டது. அவர்கள் இசைக்கும் வீணை ருத்ர வீணையாகும். அது இறைவன் தந்தது என்றும் இறைவனின் வடிவமாகும் என்றும் எண்ணற்ற அதிசயங்களை ராக ஆலாபணைகளால் செய்யக் கூடியது என்றும் சொல்வார்கள். இதன் அமைப்பும், வடிவமும் வித்தியாசமாக இருப்பதோடு இதன் மீட்டல் லயம் நீண்ட நேரத்திற்கு இன்பம் தருபவையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தேக்கு மரத்தாலானது. இரண்டு குடங்களும் பதப்படுத்தப்பட்ட பூசணிக் காயால் ஆனது. இது 22 உலோகக் கட்டைகளும், ஏழு தந்திகளையும் உடையது. விசித்திர வீணையும் ருத்ர வீணையைப் போன்ற தோற்றத்தையே பெற்றிருக்கிறது. ஆனால் 16 தந்திகளையே கொண்டுள்ளது. அதில் 6 முக்கியமான தந்திகள். இதில் உலோகக் கட்டைகள்(frets) கிடையாது. மனிதன் பேசுவது போலக் கூட இதில் இசைக்க முடியும். தென்னிந்தியாவில் பிரபலமானது ஸரஸ்வத வீணை. இது பலா மரத்தின் ஒரே கட்டையால் செய்யப்படுகிறது. இதில் 24 உலோகக் கட்டைகள் உண்டு. 7 தந்திகளும் உண்டு. இதில் 4 மீட்டுவதற்கும், 3 தாளத்திற்கும் பயன்படும். இதில் இடது பக்கம் காணப்படும் சிறு பானை போன்ற அமைப்பு வடிவத்திற்காகவும், லாவகமாகக் கையாள்வதற்காக மட்டுமே.

எண்ணற்ற தேவ வாத்தியங்களும், இசைக் கருவிகளும் காலத்தால் அழிந்து விட்டாலும், இருக்கும் சிலவற்றையாவது காப்பாற்றும் கடமை நமக்கும் உள்ளது. ஏனெனில் தேவ வாத்தியங்களில் இறை சக்தி உள்ளது. அது எல்லா நிலைகளிலும் மக்களைக் காத்திருக்கின்றன என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இதை அறிவுறுத்தவே எல்லா தெய்வவடிவங்கள் கைகளிலும் ஏதாவது ஒரு வாத்தியக் கருவி காணப்படுகிறது.
______________________________

தமிழ் மொழி

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.

இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாக தெரிஉந்து கொண்டு பின்னர் ஆங்கிலத்தை படியுங்கள்.

ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? காரணம், தமிழ் மீதான ஒரு அறுவருப்பு தமிழனுக்குள்ளேயே விதைக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்காக போராட வேண்டாம் வீட்டில் தமிழில் பேசுங்கள் போதும். அது தான் தமிழை வளர்க்கும். ஆரியம், இங்கிலாந்து என எத்தனையோ படையெடுப்பைத் தாண்டி வாழ்ந்த தமிழ் இன்று தமிழனாலே மாண்டு விடுமோ? உலகிலேயே ஆங்கிலத்தை மிகச் சரியாக உச்சரிப்பவர்களும் தமிழர் தான், தன் தாய் மொழி குறித்த அடிப்படை அறிவு பெறாதவர்களும் தமிழர் தான். இது பெருமை படக் கூடிய விடயமா? தமிழின் சிறப்புகளை இங்கே உணர்த்துவதே எமது நோக்கம். தமிழின் சில சிறப்புகளை இங்கே காணலாம்.

தமிழ் மொழிக்கு என்று இயற்கையாகவே சில சிறப்புகள் உண்டு. தமிழ் மொழி மற்ற எல்லா மொழிகளையும் விட மிக எளிமையானது. ஒரு மிகச் சிறந்த இலக்கணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி தமிழ் மொழி. இன்றைக்கு ஆங்கிலத்தை பெருமையாக நினைப்பவர்கள் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும். வெறும் 26 எழுத்துக்களைக் கொண்ட மொழி, ஒரு செம்மையான இலக்கணம் இல்லாத மொழி, ஒரு ஒழுங்கில்லாத மொழி ஆங்கிலம். ஆனால் தமிழ் அப்படி இல்லை. வாழ்வியல், அறிவியல் என அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கி செதுக்கப்பட்டது தமிழ் மொழி. அதற்கு ஒரு சில சான்றுகளை இங்கே காணலாம்.

ஆங்கிலத்தில் 'BOOK' என்பதை எவ்வாறு எழுதுகிறீர்கள் B - பி, o - ஒ, o - ஒ, k - கே. அதாவாது பிஓஓகே என்ற எழுத்துக் கூட்டு புக் என உச்சரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆங்கில எழுத்துகளுக்கு நிலையான ஓசை இல்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் தமிழில் இதையே புக் என எழுத முடியும்.

அடுத்ததாக 'ARAVAIND' என்ற சொல்லை அரவிந்த் என்று உச்சரிக்கிறோம் ஆனால் 'ANGEL' என்ற சொல்லை ஏஞ்சல் என்று உச்சரிக்கிறோம். இங்கே 'A' என்ற ஒரே சொல்லே இடத்திற்கேற்ப 'அ' என்றும் 'ஏ' என்றும் வெவ்வேறு ஓசையைக் கொள்கின்றன.

ஆங்கிலத்துல் குறில், நெடில் என்ற பாகுபாடே இல்லை. ‘BEE’ என்ற சொல்லில் இரு குறில்கள் சேர்ந்து நெடிலாகிறது, அதே சமையம் ‘LARGE’ என்ற சொல்லில் குறிலே இங்கு நெடிலாக மாறுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ‘BOOK’ என்ற சொல்லில் இரு குறில்கள் வந்தாலும் அது குறிலாகவே நிலைப்பெறுகிறது.

வெறும் 26 எழுத்துக்களே பெற்று எழுத்து பற்றாக்குறை கொண்ட மொழி ஆங்கிலம். அதனால் தான் ஒரே எழுத்துக்கு பல உச்சரிப்புகள், ஓசைகள் பெறுகின்றன. ஆங்கில மொழியின் உயிர் எழுத்துக்கள் வெறும் 5 எழுத்துக்களே ‘A, E, I, O, U’ மீதம் உள்ள 21 எழுத்துக்களை உயிர் மெய் எழுத்துக்கள் எனக் கொள்ளலாம். ஆனால் இவை மட்டும் ஒரு மொழியின் தேவையை பூர்த்தி செய்து விட முடியாது. ஆங்கிலத்தில் மெய் எழுத்துக்களே கிடையாது, ஆனாலும் ஒரு சில நேரங்களில் ‘Consonents’ என்று சொல்லப்படும் ஆங்கில உயிர் மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களாக தோன்றும். உதாரணமாக “PARK” என்ற சொல்லை பார்க் என்று உச்சரிக்கும் போது ‘R’ மற்றும் ‘K’ என்ற எழுத்துக்கள் மெய் எழுத்துகளாகத் தோன்றுகின்றன.

ஆக தோழர்களே இவ்வளவு குழப்பங்களும், குறைபாடுகளும் உள்ள ஆங்கில மொழி உங்களுக்கு சிறப்பானதா?, எளிதானதா?. உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன் பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும். சிந்தியுங்கள். மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், அவசியத்திற்கு ஆங்கிலம், அடையாளமாய்த் தமிழ்!
______________________________

ஐயா, அம்மையீர்..!

நீங்கள் தமிழர்களாயின் இதைச் சற்றே படித்துப் பலருடன் பகிருங்கள்.
தினமணி(26/5/13) தமிழ்மணிப் பகுதியில் திரு சிவதானுப்பிள்ளை எழுதிய தமிழா, டமிலா என்ற கட்டுரையில் ஒரு பகுதியில் தெரிவித்ததாவது:

அண்மையில் 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மலையாளம் செம்மொழியாகும் நிலையில் மார்தட்டிக் கொள்ளும் மலையாளிகள், "உங்கள் தமிழ் மொழியில் ழ ஒலியே கிடையாது. அது எங்களுக்கே உரிய சிறப்பெழுத்து. அதனால்தான் தமிழர்கள் எல்லோரும் மலை, தமில் ,அளகு ,பலம், பளகு , எளில் (மழை , தமிழ் , அழகு, பழம், பழகு, எழில்) என்று பலுக்குகின்றனர் (உச்சரித்தல்) என்று கூறினாராம்.

அவர்கள் கூற்று முற்றிலும் ஏற்கக்கூடியதே! அவர்களை சினக்கத் தேவையில்லை. நம்மில் பலர், புலம் பெயர்ந்தோர், தென் தமிழகத்தார் ஆகியோர் ழகரம் பலுக்க இயலாதது ஒரு தவக்குறைவோ என எண்ண வேண்டியுள்ளது. சற்றே முயன்றால் ழகரம் ஒலிபபது கைகூடுமே. தயங்காது முயன்றால் அது திருவினையாகும்.

இல்லையெனில் தமிழர் என்ற அடையாளங்களை ஒவ்ஒன்றாக இழந்து விடுவோம் என்பது திண்ணம். தூய தமிழ் ஒலிகளை வருங்காலத்தில் காணொளி, குறுந்தகடுகளில் மட்டுமே பின் தலைமுறையினர் காட்சிப் பொருளாக, வரலாறாகத் தான் காணக் கேட்கக் கூடியதாக இருக்கும்.

மலையாளிகள் எவ்வளவு பற்றாக வாய் குழைத்து ஆலம்புழா, மலப்புழா, கோழிக்கோடு, தகழி என்றெல்லாம் பிசகாமல் ஒலிக்கின்றனர். இந்தப் பற்று ழகர எழுத்துரிமை பெற்ற நமக்கு வேண்டாமோ! அன்று கடன் பெற்றவர்கள் இன்று முதலாளி ஆகிவிட்டனர். இந்நிலையில் நாம் எந்தப் பொறுப்பும் ஏற்காமல் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றோம். இனியேனும் தமிழ் மரபால் ழகரத்தால் ஒன்றிணைவோம் எனச் சூளுரைத்து நிற்போம் செயல்படுவோம்.

கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...

மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே.



தமிழின் சிறப்பு-
”உலகில் தமிழே பண்பட்ட மொழி. தனக்கென எல்லாம் வாய்ந்த இலக்கிய செல்வங்கள் பெற்ற மொழி” -மாக்கஸ் முல்லர்-
”ஈற்றல் மிக்கதாகவும். சொல்ல வந்த பல விடயத்தை சில சொற்களில் தெளிவாக சொல்ல வல்லதுமான மொழி தமிழ் போல் வேறில்லை. ” -பெர்கில் பாதிரியார்-
”உலக அறிவை உணர்த்தம் சிறப்பில் திருக்குறளுக்கு இணையாக உலக இலக்கியத்தில் வேறில்லை. ” -டொக்ரர் இல்பட் சுவைட்சர்-
”தமிழில் உள்ள அகத்துறை இலக்கியங்கள் போல் உலகில் வேறெந்த மொழியிலுமில்லை. ” -பெஸ்கிப் பாதிரியார் (வீரமாமுனிவர்)-

சமணரின் கருத்துரைக்கும்……………… சிலப்பதிகாரம். சீவக சிந்தாமணி பௌத்த கருத்துரைக்கும்……………… மணிமேகலை
சைவ கருத்துரைக்கும்……………… கந்தபுராணம். பெரியபுராணம்
வைஸ்ணவ கருத்துரைக்கும்……………… கம்பராமாயணம்
கிறிஸ்தவ கருத்துரைக்கும்……………… தெம்பவாணி
இஸ்லாமிய கருத்துரைக்கும்……………… சீறாப்பராணம்

ஆகிய பேரிலக்கியங்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.
______________________________
______________________________