Sunday 11 May 2014

பதினாறு பண்புகள்

இயல்பாகத் தோன்றிய இயன்மொழிக்கு பதினாறு பண்புகள் இருக்க வேண்டும்.
அப்பதினாறும் அமைந்த மொழி தமிழ் மொழி மட்டுமே என்று மொழி
வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
முன்மை வியன்மை வளமை மறைமை
எண்மை இளமை இனிமை தனிமை
ஓண்மை இறைமை அம்மை செம்மை
எனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பனெப்
பன்னுவர் மொழிவலர் பாவாணார் தாமே.


தமிழில் பேசுவது மட்டும் அல்ல ...அதனைத் தெளிவாகவும்
திருத்தமாகவும் பேசுதல் இன்னும் நலம் !
அது சரி ; நெற்றிப்பொட்டில் அடித்தாற் போன்றது அக்கடைசி நான்கு வரிகள்...


இது கொஞ்சம் கனமானது... இருந்தாலும் பரவாயில்லை...
இறைவன் என்பது பழந்தமிழ்ச் சொல். இது ' இறு ' எனும் அடியிலிருந்து பிறந்தது.
எல்லா இடங்களிலும் தங்கிய பொருள் என்பது இதன் மூலப் பொருள்.
இறு - இறை - இறைவன் எனக் குறிப்பார் ஒரு பேரறிஞர்.

லத்தீன் மொழியில் உள்ள era எனும் சொல்லுக்கு மனைவி , இறைவி என்பது அங்கு பொருளாகும்.
erus என வழங்கப்படும் சொல்லுக்கும் இதே பொருள்தான்.
erus - a master , owner , Lord என்பது லத்தீன் அகராதி தரும் விளக்கம்.
' era ' என்பது கிரேக்கப் பெண் தெய்வம் குறிக்கும் ஒரு சொல்.
இந்த ' era ' சொல் hera என ஆகும் எனவும் அதே அகராதி சுவடு காட்டுகிறது.

hera - era என்பதுடன் Hera - the Greek goddess identified with Roman juno என லத்தீன் அகராதி விளக்குவது காணத்தக்கது.
இதிலிருந்தே Hero வும் ; கடவுளின் அருள் பெற்றவன் என்பதே இதற்கு மூலப்பொருள்.
Hercules எனும் ஆங்கிலச் சொல்லின் கிரேக்க வடிவம் Herakles என்பதே.
தெய்வ வல்லமை மிக்கவனாக அவன் ஆண்டுக் கருதப்படுகிறான்.

ஆக, தெய்வம் குறிக்கும் hera சொல் , தமிழின் era வோடு உறவானது !
அனைத்திற்கும் வேர்ச் சொல் ' இறு ' !!
------------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் வாழும் இப்புவிக்கு தமிழில் பல சொற்கள் உண்டு.
இவற்றுள் ' தாலம் ' என்பதும் ஒன்று !
தாலம் எனில் that which is suspended in space - இப்பொழுது தெளிவாகிறது இல்லையா...!?
புவியை யானைகள் , ஒரு மகாபலசாலி தாங்குவது என்பது போன்ற கற்பனைகள் எல்லாம் மேலோங்கி
இருந்த காலத்தில் இச்சொல் உருவாகியுள்ளதைக் காண்கையில் நாம் சற்று கர்வம் கொள்ளலாம் !

' தாலி ' என்பதும் தொங்குவது என்ற பொருளில்தான் ...
இப்பத் திகைப்பாய் இருக்கு இல்லை...

மேலே உள்ள சொல் விளக்கம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஆழ்ந்த கருத்துகளை ,ஆரவாரமின்றி , அமைதியாக,
ஆற்றொழுக்கான நடையில் ஒருவர் ஆற்றிய நான் கேட்ட ஒரு சொற்பொழிவிலிருந்து...

1 comment: