Sunday 11 May 2014

'வ.உ.சி.கட்டுரைகள்'

'கப்பலோட்டிய தமிழன்' எனப் புகழப்படும் வ.உ.சி எனும் பெருந்தகை கூர்த்த மதி நிறைந்த வழக்குரைஞர்
( இவர் தந்தையும் கூட வழக்கறிஞரே.. ) மட்டுமல்ல , மிகச் சிறந்த தமிழ் அறிஞருமாவார் என நான் முன்னர் சொல்லியிருந்தேன் ;
அன்னார் எல்லாம் என்றும் தமிழுலகு முழுவதற்கும் சொந்தம் ! ஆனால் , இப்பேரறிவாளனை இன்று ஒரு சாதித் தலைவராகக்
குறுக்க முயற்சிப்பதில் என் ஆதங்கத்தையும் அப்போது வெளியிட்டிருந்தேன் ;
பின்னர் , அதை நான் நீக்கி விட்டபோது நீங்கள் அதெல்லாம் இருக்கட்டுமே என்று அபயம் அளித்ததால் இங்கு மீண்டும்...

நிற்க...

வ.உ.சி அவர்கள் தமிழ் மறையாம் திருக்குறள் மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தார்கள் என்பதை கீழே அவர் சொல்லியவை நம் மனதில் நிறுத்தும்...

வ.உ.சிதம்பரனார் ( 1872 - 1936 ) 'வ.உ.சி.கட்டுரைகள்' எனும் நூலில் , " பாயிர ஆராய்ச்சி " எனும் கட்டுரையிலிருந்து...

" தமிழறிகளெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும்.
1330 - குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத் துறந்த முனிவரேயாயினும்,
என்னைப் பெற்ற தந்தயே யாயினும், யான் பெற்ற மக்களேயாயினும்,
யான் அவரைப் பூர்த்தியாய் மதிப்பதுமில்லை ; நேசிப்பதுமில்லை. "

வேறொரு இடத்தில் அவர் எழுதுகிறார்...

"ஆரியமே ஏற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின்
ஓரியலே கற்றாலும் ஓதாராஞ் - சீரடியில்
நூற்பொருளும் வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல் ஒன்றங்
கேற்படநாம் கண்டதுண்டோ இன்று "

இப்பாடல் , வ.உ.சி யின் முதல் அரசியல் கட்டுரையான ' சுதேசாபிமானம்'
மதுரை ' விவேகபானு' எனும் திங்கள் இதழில் 1906- பிப்ரவரியில் ஏழு பக்கங்களில் வெளி வந்தது .


No comments:

Post a Comment