Friday 9 May 2014

பழமொழி

பழமொழி: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

மூதுரை என்னும் நூலில் ஔவையார் அவர்கள் எழுதிய பாடல் பின்வருமாறு.

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தளன்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும்.

பசி வந்தால் பறந்துபோகும் பத்து என பின்வருவனவற்றை ஔவையார் கூறுகிறார்.

மானம்
குலம்
கல்வி
வன்மை
அறிவுடைமை
தானம்
தவம்
உயர்ச்சி (பதவி)
தளன்மை (இளகிய மனம்)
காமுறுதல்
______________________________

No comments:

Post a Comment