காக்கைக்கா காகூகை, கூகைக்கா காகாக்கை,
கோக்குக்கூக், காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
-புலவர் காளமேகம்-
______________________
(1)காக்கைக்கா காகூகை = காக்கைக்கு ஆகா கூகை
(2)கூகைக்கா காகாக்கை = கூகைக்கு ஆகா காக்கை
பாடல் பொருள்:
இரவில் காக்கைக்கு ஆகாது கூகை (ஆந்தை). அதாவது காக்கையும் கூகையும் பகையானவை. பகலில் கூகைக்குக் காக்கை ஆகாது. பகலில் காக்கை வலிமை பெறும். இரவில் கூகை வலிமை பெறும். அதுபோல காலம் கருதி, அரசன் கொக்கைப் போல காத்திருந்து எதிரிகளை அழிக்க வேண்டும். இல்லையென்றால் எவ்வெற்றியும் இந்திரனாக இருந்தாலும் கிடைக்காது. என்று பாடல் பொருள் தருகிறது. அதே நிலையில் சொல் வகையாலும் அழகு பெறுகிறது. இதனை உணர்ந்து, இதே வகையில் நாமும் சொல்லணி வயப்படுவோம்.
______________________________

No comments:
Post a Comment