Saturday 10 May 2014

தமிழ் மொழி

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.

இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாக தெரிஉந்து கொண்டு பின்னர் ஆங்கிலத்தை படியுங்கள்.

ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? காரணம், தமிழ் மீதான ஒரு அறுவருப்பு தமிழனுக்குள்ளேயே விதைக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்காக போராட வேண்டாம் வீட்டில் தமிழில் பேசுங்கள் போதும். அது தான் தமிழை வளர்க்கும். ஆரியம், இங்கிலாந்து என எத்தனையோ படையெடுப்பைத் தாண்டி வாழ்ந்த தமிழ் இன்று தமிழனாலே மாண்டு விடுமோ? உலகிலேயே ஆங்கிலத்தை மிகச் சரியாக உச்சரிப்பவர்களும் தமிழர் தான், தன் தாய் மொழி குறித்த அடிப்படை அறிவு பெறாதவர்களும் தமிழர் தான். இது பெருமை படக் கூடிய விடயமா? தமிழின் சிறப்புகளை இங்கே உணர்த்துவதே எமது நோக்கம். தமிழின் சில சிறப்புகளை இங்கே காணலாம்.

தமிழ் மொழிக்கு என்று இயற்கையாகவே சில சிறப்புகள் உண்டு. தமிழ் மொழி மற்ற எல்லா மொழிகளையும் விட மிக எளிமையானது. ஒரு மிகச் சிறந்த இலக்கணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி தமிழ் மொழி. இன்றைக்கு ஆங்கிலத்தை பெருமையாக நினைப்பவர்கள் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும். வெறும் 26 எழுத்துக்களைக் கொண்ட மொழி, ஒரு செம்மையான இலக்கணம் இல்லாத மொழி, ஒரு ஒழுங்கில்லாத மொழி ஆங்கிலம். ஆனால் தமிழ் அப்படி இல்லை. வாழ்வியல், அறிவியல் என அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கி செதுக்கப்பட்டது தமிழ் மொழி. அதற்கு ஒரு சில சான்றுகளை இங்கே காணலாம்.

ஆங்கிலத்தில் 'BOOK' என்பதை எவ்வாறு எழுதுகிறீர்கள் B - பி, o - ஒ, o - ஒ, k - கே. அதாவாது பிஓஓகே என்ற எழுத்துக் கூட்டு புக் என உச்சரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆங்கில எழுத்துகளுக்கு நிலையான ஓசை இல்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் தமிழில் இதையே புக் என எழுத முடியும்.

அடுத்ததாக 'ARAVAIND' என்ற சொல்லை அரவிந்த் என்று உச்சரிக்கிறோம் ஆனால் 'ANGEL' என்ற சொல்லை ஏஞ்சல் என்று உச்சரிக்கிறோம். இங்கே 'A' என்ற ஒரே சொல்லே இடத்திற்கேற்ப 'அ' என்றும் 'ஏ' என்றும் வெவ்வேறு ஓசையைக் கொள்கின்றன.

ஆங்கிலத்துல் குறில், நெடில் என்ற பாகுபாடே இல்லை. ‘BEE’ என்ற சொல்லில் இரு குறில்கள் சேர்ந்து நெடிலாகிறது, அதே சமையம் ‘LARGE’ என்ற சொல்லில் குறிலே இங்கு நெடிலாக மாறுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ‘BOOK’ என்ற சொல்லில் இரு குறில்கள் வந்தாலும் அது குறிலாகவே நிலைப்பெறுகிறது.

வெறும் 26 எழுத்துக்களே பெற்று எழுத்து பற்றாக்குறை கொண்ட மொழி ஆங்கிலம். அதனால் தான் ஒரே எழுத்துக்கு பல உச்சரிப்புகள், ஓசைகள் பெறுகின்றன. ஆங்கில மொழியின் உயிர் எழுத்துக்கள் வெறும் 5 எழுத்துக்களே ‘A, E, I, O, U’ மீதம் உள்ள 21 எழுத்துக்களை உயிர் மெய் எழுத்துக்கள் எனக் கொள்ளலாம். ஆனால் இவை மட்டும் ஒரு மொழியின் தேவையை பூர்த்தி செய்து விட முடியாது. ஆங்கிலத்தில் மெய் எழுத்துக்களே கிடையாது, ஆனாலும் ஒரு சில நேரங்களில் ‘Consonents’ என்று சொல்லப்படும் ஆங்கில உயிர் மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களாக தோன்றும். உதாரணமாக “PARK” என்ற சொல்லை பார்க் என்று உச்சரிக்கும் போது ‘R’ மற்றும் ‘K’ என்ற எழுத்துக்கள் மெய் எழுத்துகளாகத் தோன்றுகின்றன.

ஆக தோழர்களே இவ்வளவு குழப்பங்களும், குறைபாடுகளும் உள்ள ஆங்கில மொழி உங்களுக்கு சிறப்பானதா?, எளிதானதா?. உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன் பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும். சிந்தியுங்கள். மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், அவசியத்திற்கு ஆங்கிலம், அடையாளமாய்த் தமிழ்!
______________________________

ஐயா, அம்மையீர்..!

நீங்கள் தமிழர்களாயின் இதைச் சற்றே படித்துப் பலருடன் பகிருங்கள்.
தினமணி(26/5/13) தமிழ்மணிப் பகுதியில் திரு சிவதானுப்பிள்ளை எழுதிய தமிழா, டமிலா என்ற கட்டுரையில் ஒரு பகுதியில் தெரிவித்ததாவது:

அண்மையில் 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மலையாளம் செம்மொழியாகும் நிலையில் மார்தட்டிக் கொள்ளும் மலையாளிகள், "உங்கள் தமிழ் மொழியில் ழ ஒலியே கிடையாது. அது எங்களுக்கே உரிய சிறப்பெழுத்து. அதனால்தான் தமிழர்கள் எல்லோரும் மலை, தமில் ,அளகு ,பலம், பளகு , எளில் (மழை , தமிழ் , அழகு, பழம், பழகு, எழில்) என்று பலுக்குகின்றனர் (உச்சரித்தல்) என்று கூறினாராம்.

அவர்கள் கூற்று முற்றிலும் ஏற்கக்கூடியதே! அவர்களை சினக்கத் தேவையில்லை. நம்மில் பலர், புலம் பெயர்ந்தோர், தென் தமிழகத்தார் ஆகியோர் ழகரம் பலுக்க இயலாதது ஒரு தவக்குறைவோ என எண்ண வேண்டியுள்ளது. சற்றே முயன்றால் ழகரம் ஒலிபபது கைகூடுமே. தயங்காது முயன்றால் அது திருவினையாகும்.

இல்லையெனில் தமிழர் என்ற அடையாளங்களை ஒவ்ஒன்றாக இழந்து விடுவோம் என்பது திண்ணம். தூய தமிழ் ஒலிகளை வருங்காலத்தில் காணொளி, குறுந்தகடுகளில் மட்டுமே பின் தலைமுறையினர் காட்சிப் பொருளாக, வரலாறாகத் தான் காணக் கேட்கக் கூடியதாக இருக்கும்.

மலையாளிகள் எவ்வளவு பற்றாக வாய் குழைத்து ஆலம்புழா, மலப்புழா, கோழிக்கோடு, தகழி என்றெல்லாம் பிசகாமல் ஒலிக்கின்றனர். இந்தப் பற்று ழகர எழுத்துரிமை பெற்ற நமக்கு வேண்டாமோ! அன்று கடன் பெற்றவர்கள் இன்று முதலாளி ஆகிவிட்டனர். இந்நிலையில் நாம் எந்தப் பொறுப்பும் ஏற்காமல் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றோம். இனியேனும் தமிழ் மரபால் ழகரத்தால் ஒன்றிணைவோம் எனச் சூளுரைத்து நிற்போம் செயல்படுவோம்.

கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...

மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே.



தமிழின் சிறப்பு-
”உலகில் தமிழே பண்பட்ட மொழி. தனக்கென எல்லாம் வாய்ந்த இலக்கிய செல்வங்கள் பெற்ற மொழி” -மாக்கஸ் முல்லர்-
”ஈற்றல் மிக்கதாகவும். சொல்ல வந்த பல விடயத்தை சில சொற்களில் தெளிவாக சொல்ல வல்லதுமான மொழி தமிழ் போல் வேறில்லை. ” -பெர்கில் பாதிரியார்-
”உலக அறிவை உணர்த்தம் சிறப்பில் திருக்குறளுக்கு இணையாக உலக இலக்கியத்தில் வேறில்லை. ” -டொக்ரர் இல்பட் சுவைட்சர்-
”தமிழில் உள்ள அகத்துறை இலக்கியங்கள் போல் உலகில் வேறெந்த மொழியிலுமில்லை. ” -பெஸ்கிப் பாதிரியார் (வீரமாமுனிவர்)-

சமணரின் கருத்துரைக்கும்……………… சிலப்பதிகாரம். சீவக சிந்தாமணி பௌத்த கருத்துரைக்கும்……………… மணிமேகலை
சைவ கருத்துரைக்கும்……………… கந்தபுராணம். பெரியபுராணம்
வைஸ்ணவ கருத்துரைக்கும்……………… கம்பராமாயணம்
கிறிஸ்தவ கருத்துரைக்கும்……………… தெம்பவாணி
இஸ்லாமிய கருத்துரைக்கும்……………… சீறாப்பராணம்

ஆகிய பேரிலக்கியங்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.
______________________________
______________________________

No comments:

Post a Comment