Saturday 10 May 2014

சிலேடை

சிலேடை என்பது ஒரு சொல்லுக்கு இரு பொருள் காண்பது. இரு பொருள்பட அமையும் சிலேடை, செய்யுளுக்கு அணியைச் சேர்க்கும் சிறப்புடையது.

சிலேடைச் செய்யுள் பாடுவது மிகுந்த புலமையுடையவர்களால் மட்டுமே முடிந்த செயலாகும். தமிழ்ப் புலவர்களில், கவி காளமேகம் சிலேடை பாடுவதில் சிறந்தவராக விளங்கினார்.

இதோ அடியேன் இரசித்த ஒரு : ஐந்து "டு" பாடல்!

ஓகாமா விதோநே ரொக்க டுடுடுடுடு
நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய்
எடுப்பர் நடமிடுவர் ஏறுவர்அன் பர்க்கும்
கொடுப்பர் அணிவர் குழைக்கு.

விளக்கம்:
ஓ கா மா வீ தோ என்னுமிந்த ஐந்து எழுத்துகளும் டுடுடுடுடு
என்கிற இந்த ஐந்து எழுத்துகளுடன் பொருந்துவதால் உண்டாகும் சொற்கள் முறையே ஓடு, காடு, மாடு, வீடு, தோடு.

குடந்தை நகர்த் தலைவனான சிவபெருமான் ஓட்டைக் கையில் கொண்டுள்ளார். காட்டில் நடனமாடுவார், மாட்டின் மேல் ஊர்வார், வீட்டை (முக்தியை)ப் பக்தர்களுக்கு அளிப்பார். தோட்டைக் (காதணியைக்) காதில் அணிவார்.

புரிதல் ஏற்பட்டதா? என்னைப் போல் நீங்களும் இரசித்தீர்களா?
______________________________

No comments:

Post a Comment